நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கெடாவில் அறுவடைக்கு தயாராக இருந்த  232 ஹெக்தர் நெல் வயல்கள் வெள்ளத்தில் மூழ்கியது

ஜித்ரா:

கெடாவில் அறுவடைக்கு தயாராக இருந்த  232 ஹெக்தர் நெல் வயல்கள் வெள்ளத்தில் மூழ்கியது.

இதனால் 93 விவசாயிகளுக்கு 2 மிலியன் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டுள்ளது.

கடும் மழையைத் தொடர்ந்து கெடாவில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது.

இந்த வெள்ளத்தில் லுபும் பத்து பகுதியில் உள்ள நெல் வயல்களும் மூழ்கியது.

கிட்டத்தட்ட 232 ஹெக்டர் நெல் வயல்கள் வெள்ளத்தால் சேதமடைந்தன.

வெள்ள நீர், சேற்றில் மூழ்கியதால் சம்பந்தப்பட்ட வயல்களில் அறுவடை செய்ய முடியவில்லை.

இதனால் 93 விவசாயிகளுக்கு மிகப் பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இம்முறை ஏற்பட்ட நஷ்டம் மிக அதிகம் என்பது உண்மைதான்,

கடந்த 2010ல் கெடாவில் பெரும் வெள்ளம் ஏற்பட்ட வெள்ளச் சம்பவத்தைப் போன்றே இந்த விவசாயிகளைப் பாதிக்கும் நிலை உள்ளது.

லுபுக் பத்து நெல் வயல் விவசாயிகள் சங்கத்தின் தலைவர் ஹரூண் ஜம்ரி இதனை கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset