நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மின்னொளியில் ஜொலிக்கும் சிங்கப்பூர் லிட்டில் இந்தியா; களை கட்டிய தீபாவளி கொண்டாட்டம் 

சிங்கப்பூர்:

 சிங்கப்பூரில் தீபாவளி கொண்டாட்டங்கள்  இப்போதே களை கட்டியுள்ளன. 

குறிப்பாக சிங்கப்பூர் லிட்டில் இந்தியா, மின்னொளியில் ஜொலிக்கிறது.

சிங்கப்பூர் லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கம் இவ்வாண்டு குடும்பம் எனும் கருப்பொருளை மையமாக வைத்து தீபாவளி நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

தீபாவளி ஒளியூட்டு விழாவை மூத்த அமைச்சர் தியோ சீ ஹியன் நிரம்பி வழிந்த கூட்டத்தினரின் பலத்த கரவொலிக்கிடையே துவக்கி வைத்தார். 

இதனைத் தொடர்ந்து நவம்பர் 17ஆம் தேதி வரை 64 நாட்கள் நடக்கும் இந்த விழா, சுற்றுலாப் பயணிகளையும் சிங்கப்பூரர்களையும் இது மகிழ்விக்கும்.

ஒளியூட்டைத் தொடர்ந்து இரவு முழுவதும் பொது மக்கள் கண்டு மகிழும் வண்ணம் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. 

இவ்வாண்டின் கருப்பொருளான குடும்பத்தை மையப்படுத்தியே நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset