நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியா நாள் கொண்டாட்டம்: சிவகுமார் வெ.5000 மானியம் வழங்கினார்

பத்து காஜா: 

மலாயா மலேசியாவான வரலாற்றை ஒவ்வொரு  மலேசியர்களும் நனிச் சிறப்போடு கொண்டாடி மகிழ்வது பெருமிதமாக இருப்பதாக பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு வ.சிவகுமார் தெரிவித்தார்.

சுதந்திர நாள் போல் மலேசியா நாளும் ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு பகுதியிலும் மலேசியர்கர் கொண்டாடி மகிழ்வதை காணும் பல்லினம் வாழும் இந்நாட்டின் மீது நம் மக்கள் கொண்டிருக்கும் உன்னத உணர்வையும் நேசப்பற்றையும் வெளிப்படுத்துவதாக அவர் மேலும் கூறினார்.

கம்போங் மெம்பான் கிராம மேம்பாட்டு நிர்வாகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற மலேசியா நாள் குறித்து சிவகுமார் இவ்வாறு கருத்துரைத்தார்.

மேலும்,கிராம மேம்பாட்டு நிர்வாகங்கள் கிராமத்தின் தேவைகள்,அடிப்படை வசதிகளை மட்டுமின்றி பல்லின மக்களின் ஒற்றுமையையும் புரிந்துணர்வையும் வலுப்பெற செய்யவும் பெரும் பங்களிப்பு செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

சுமார் 250க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட மலேசியா நாள் கொண்டாட்டம் அதன் இலக்கை எட்டவும் சிறப்பாக அமையவும் மாண்புமிகு சிவகுமார் வெ.5000 மானியமாக வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்,மலேசியர்களிடையே எல்லா காலக்கட்டத்திலும் மேலோங்கியிருக்கும் தேச உணர்வும் ஒற்றுமையும் தான் இந்நாட்டின் உன்னதம்.அதுமட்டுமின்றி,அதுதான் நம் நாட்டின் தனித்துவமும் மேம்பாடும் வளர்ச்சியும் கூட என்றார்.

மிகவும் சிறப்பாக நடந்தேறிய இந்நிகழ்ச்சியில் பல்வேறு பாரம்பரிய விளையாட்டுகள் நடைபெற்றதோடு மாவட்ட துணை காவல்துறை தலைவர் ஓசிபிடி,ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் உட்பட பல்வேறு பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.

அதுமட்டுமின்றி,இந்நிகழ்ச்சி கிராமத்து மக்களிடமும் வட்டாரப் பொது மக்களிடையிலும் ஒற்றுமையையும் அன்பையும் விதைக்கும் உன்ன நாளாய் இது அமைந்திருப்பதாகவும் சிவகுமார் குறிப்பிட்டார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset