நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

குடிநுழைவு துறையின் புதிய தலைமை இயக்குநராக ஸகாரியா ஷபான் நியமனம் 

கோலாலம்பூர்: 

மலேசிய குடிநுழைவு துறையின் புதிய தலைமை இயக்குநராக ஸகாரியா ஷபான் நியமிக்கப்பட்டார். இவர் இதற்கு முன் உள்நாட்டு வாணிப வாழ்க்கை செலவின அமைச்சின் தலைமை செயலாளராக பணிபுரிந்து வந்தார். 

அவரின் நியமனம் நடப்புக்கு வருவதாக மலேசிய குடிநுழைவு துறை தமது அதிகாரப்பூர்வ முகநூல் பதிவில் தெரிவித்தார் 

இதற்கு முன் பொறுப்பில் இருந்த ருஸ்லின் ஜுசோவிற்குப் பிறகு ஸகாரியா இந்த பொறுப்பிற்கு நியமிக்கப்பட்டுள்ளார். 

பொதுச்சேவை துறையில் ஸகாரியா ஷபான் 25 ஆண்டுகளாக அனுபவம் கொண்டவர் என்றும் பல்வேறான அரசாங்க துறைகளிலும் அமைப்புகளிலும் தனக்கான பணிகளைச் செவ்வனே ஆற்றியுள்ளார். 

மலேசிய உயர்க்கல்வி அமைச்சு, தேசிய பேரிடர் நிர்வாக அமைப்பான நட்மாவிலும் அவர் பணியாற்றியுள்ளார்.

-தமிழன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset