நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோலாலம்பூர் - டெல்லி இடையிலான தினசரி, புதிய இடைவிடா விமானச் சேவைகளை ஏர் இந்தியா அறிமுகம் செய்துள்ளது

கோலாலம்பூர்:

இந்தியாவின் முன்னணி விமான நிறுவனமான ஏர் இந்தியா, கோலாலம்பூர் - டெல்லி இடையிலான தினசரி, புதிய இடைவிடா விமானச் சேவைகளை அறிமுகம் செய்துள்ளது. 

ஞாயிற்றுக்கிழமை டெல்லியிலிருந்து பயணிகளுடன் கேஎல்ஐ வந்திறங்கிய முதல் விமானத்திற்கு பாரம்பரிய முறைப்படி தண்ணீர் பீய்ச்சியடித்து வரவேற்பு கொடுக்கப்பட்டது.

ஏர் இந்தியா தனது இப்புதிய வழித்தடத்திற்காக ஏர்பஸ் ஏ320நியோ விமானத்தைத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு ஆசியாவில் ஏர் இந்தியா அதன் இருப்பை மேலும் வலுப்படுத்துகிறது.

கோலாலம்பூருக்கு ஏர் இந்தியாவின் சேவை இந்தியாவிற்கும் மலேசியாவிற்கும் இடையே அதிகரித்து வரும் பயணிகளுக்கு புதிய விமான விருப்பத்தை வழங்குகிறது.

இந்தியா, மலேசியா இடையிலான கலாச்சார, பொருளாதாரப் பிணைப்புகளை இப்புதிய பாதை வலுப்படுத்தப்படும் என ஏர் இந்தியா நம்பிக்கை தெரிவித்துள்ளது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset