நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாட்டில் புதியதாகக் குரங்கம்மை தொற்று கண்டறியப்பட்டுள்ளது: ராட்ஸி அபு ஹாசன்

பெட்டாலிங் ஜெயா: 

நாட்டில் புதியதாக ஒருவருக்கும் குரங்கம்மை தொற்று கண்டறியப்பட்டதாக சுகாதார இயக்குநர் ராட்ஸி அபு ஹாசன் தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 11-ஆம் தேதி காய்ச்சல், தொண்டை புண் மற்றும் இருமல் போன்றவை அவ்வாடவருக்கு ஏற்பட்டது.

குரங்கம்மை பாதிக்கப்பட்ட நபர் 21 நாட்களுக்கு முன்பு வெளிநாடு பயணம் செய்த வரலாறு இல்லை.

தற்போது தனிமைப்படுத்தப்பட்டு நிலையான நிலையில் உள்ளார்.

நோயாளிகளின் அனைத்து தொடர்புகளும் அடையாளம் காணப்பட்டு, அவர்களின் உடல்நிலை தற்போதைய கடுமையான நிலையான இயக்க நடைமுறைகளின் படி கண்காணிக்கப்படும் என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset