நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கெமாமானில் மரம் விழுந்து கம்போடியா நாட்டு பெண்மணி மரணம் 

கோல திரெங்கானு: 

திரெங்கானு மாநில கெமாமான் பகுதியில் அமைந்துள்ள பந்தாய் பெநுஞ்ஜுக்கில் மரம் விழுந்ததில் கம்போடியா நாட்டு பெண்மணி ஒருவர் பலியானார். 

நேற்று மாலை 6.15 மணியளவில் நிகழ்ந்த இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் மரணமடைந்தார்.  கடற்கரையோரத்தில் கனமழை பெய்த நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக கெமாமான் மாவட்ட காவல்துறை தலைவர் சூப்ரிடென்டன்ட் ஹன்யான் ரம்லான் கூறினார். 

49 வயதான சலெஹா அஷாரி எனும் பெண்மணி அங்குள்ள கடற்கரையில் வணிகம் செய்து வருபவர் என்றும் நிரந்தர குடியிருப்பு ஆவணத்தைக் கொண்ட அவர், மரம் விழுந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்ததாக அவர் சொன்னார் 

மூன்று பிள்ளைகளுக்குத் தாயான அவர் மரணமடைந்த நிலையில் உடற்கூறு ஆய்வுக்காக அவரின் உடல் கெமாமான் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. 

கெமாமான் மாவட்டத்தில் நேற்று மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையை விடுத்திருந்தது.

-தமிழன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset