நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி வெடிப்பு சம்பவங்களில்  மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை: விஸ்மா புத்ரா

புத்ராஜெயா:

லெபனானில் பேஜர் வாக்கி டாக்கி வெடிப்பு சம்பவங்களில் மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்று விஸ்மா புத்ரா கூறியது.

லெபனான்  முழுவதும் பல இடங்களில் பேஜர்கள் வெடித்ததைத் தொடர்ந்து லெபனானில் உள்ள நிலைமையை  அமைச்சு கண்காணித்து வருகிறது.

மலேசியர்கள் யாரும் அதில் பாதிக்கப்படவில்லை அல்லது இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படவில்லை.

மேலும் லெபனானில் உள்ள  மலேசியர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

குறிப்பாக லெபனானின் தெற்குப் பகுதிக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்

மக்கள் நம்பகமான செய்தி ஆதாரங்கள் மூலம் சமீபத்திய தகவல்களைப் பெறவும் அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று விஸ்மா புத்ரா ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset