செய்திகள் மலேசியா
சுங்கை பூலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கைதி தப்பியோட்டம்
சுங்கை பூலோ:
சுங்கை பூலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுங்கைபூலோ சிறைச்சாலை கைதி ஒருவர் மருத்துவமனையிலிருந்து தப்பியோடியுள்ளார்
இந்த சம்பவத்தைக் காவல்துறையினர் உறுதிப்படுத்தினர்.
சம்பந்தப்பட்ட கைதி மருத்துவமனை கட்டிலில் இல்லை என்றும் அவர் தப்பியோடியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக மருத்துவமனை தரப்பு சுங்கை பூலோ காவல்துறை தலைமையகத்திற்குத் தகவல் கொடுத்ததாக சுங்கை பூலோ மாவட்ட காவல்துறை தலைவர் சூப்ரிடென்டன்ட் முஹம்மத் ஹஃபிஸ் முஹம்மத் நோர் கூறினார்.
தப்பியோடிய கைதியின் பெயர் A.KALAI KUMAR, 27 என்றும் போதைப்பொருள், அபாய குற்றங்கள் தொடர்பாக அவருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.
தப்பியோடிய கைதியை தேடி பிடிக்கும் பணிகளில் காவல்துறையினர் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர். தப்பியோடிய கைதியைப் பற்றிய தகவல்கள் ஏதேனும் இருந்தால் பொது மக்கள் தாராளமாக சுங்கைப் பூலோ காவல்துறை தலைமையகத்திலோ அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்திலும் தகவல் அளிக்கலாம்.
-தமிழன்
தொடர்புடைய செய்திகள்
September 19, 2024, 7:13 pm
நில நிர்வாகத்தை நவீனமயமாக்குமாறு மாநில அரசுக்கு பிரதமர் வலியுறுத்து
September 19, 2024, 6:55 pm
லெபனானில் தகவல் தொடர்பு சாதனங்களை ஆயுதங்களாகப் பயன்படுத்துவதை மலேசியா வன்மையாக கண்டிக்கிறது: வெளியுறவு அமைச்சு
September 19, 2024, 5:31 pm
மக்கோத்தா இடைத்தேர்தல்: தேசிய கூட்டணியின் தேர்தல் வாக்குறுதிகள் சனிக்கிழமை அறிவிக்கப்படும்
September 19, 2024, 5:29 pm
குளுவாங்கில் ஏற்பட்ட சாலை விபத்து: 4 சிறுவர்கள் உட்பட 10 பேர் காயம்
September 19, 2024, 5:27 pm
காவல்துறை உதவியாளருக்கு லஞ்சம்: இரு மியன்மார் நாட்டவர்கள் ஐந்து நாட்களுக்குத் தடுத்து வைப்பு
September 19, 2024, 4:50 pm
MOU வரைவு அறிக்கைக்கு எதிர்கட்சியினர் பதில் அளிக்கலாம்: துணைப்பிரதமர் டத்தோஶ்ரீ ஃபாடில்லா யூசோஃப்
September 19, 2024, 4:48 pm
குளோபல் இக்வானின் 19 உறுப்பினர்களுக்கு 7 நாள் தடுப்பு காவல்
September 19, 2024, 4:47 pm
முக்கிய சாட்சிக்கு எதிராக லிம் குவான் எங் போலிசில் புகார் செய்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது
September 19, 2024, 4:44 pm