நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சுங்கை பூலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கைதி தப்பியோட்டம் 

சுங்கை பூலோ: 

சுங்கை பூலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுங்கைபூலோ சிறைச்சாலை கைதி ஒருவர் மருத்துவமனையிலிருந்து தப்பியோடியுள்ளார் 

இந்த சம்பவத்தைக் காவல்துறையினர் உறுதிப்படுத்தினர்.

சம்பந்தப்பட்ட கைதி மருத்துவமனை கட்டிலில் இல்லை என்றும் அவர் தப்பியோடியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக மருத்துவமனை தரப்பு சுங்கை பூலோ காவல்துறை தலைமையகத்திற்குத் தகவல் கொடுத்ததாக சுங்கை பூலோ மாவட்ட காவல்துறை தலைவர் சூப்ரிடென்டன்ட் முஹம்மத் ஹஃபிஸ் முஹம்மத் நோர் கூறினார். 

தப்பியோடிய கைதியின் பெயர் A.KALAI KUMAR, 27 என்றும் போதைப்பொருள், அபாய குற்றங்கள் தொடர்பாக அவருக்கு எதிராக  குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் சொன்னார். 

தப்பியோடிய கைதியை தேடி பிடிக்கும் பணிகளில் காவல்துறையினர் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர். தப்பியோடிய கைதியைப் பற்றிய தகவல்கள் ஏதேனும் இருந்தால் பொது மக்கள் தாராளமாக சுங்கைப் பூலோ காவல்துறை தலைமையகத்திலோ அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்திலும் தகவல் அளிக்கலாம்.

-தமிழன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset