நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மக்கோத்தா இடைத்தேர்தலில் மூடா கட்சி எங்களுக்கு ஆதரவு வழங்கும்: அஸ்மின் அலி நம்பிக்கை 

கோலாலம்பூர்: 

ஜொகூர் மாநில மக்கோத்தா இடைத்தேர்தலில் தேசிய கூட்டணிக்கு மூடா கட்சி ஆதரவு வழங்கும் என்று தேசிய கூட்டணியின் தகவல் பிரிவு தலைவர் டத்தோஶ்ரீ அஸ்மின் அலி நம்பிக்கை தெரிவித்தார். 

மூடா கட்சி இங்கு உள்ளதால் அவர்கள் தங்கள் தரப்பு பிரச்சாரம் மேற்கொள்வார்கள் என்று கூறியதாக அஸ்மின் அலி செய்தியாளர்களிடம் கூறினார். 

மக்கோத்தா சட்டமன்ற தொகுதியில் 52 விழுக்காட்டினர் இளைஞர்களாக உள்ளனர். ஆக, மூடா கட்சி இங்கு ஒரு முக்கிய பங்கை வகிக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டார். 

மூடா கட்சியைத் தொடர்ந்து பெஜுவாங் கட்சியும் மக்கோத்தா இடைத்தேர்தலில் தேசிய கூட்டணிக்கு ஆதரவு அளிக்க தயாராக உள்ளதாக அஸ்மின் சொன்னார். 

எதிர்வரும் செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெறும் மக்கோத்தா இடைத்தேர்தலில் தேசிய முன்னணியும் தேசிய கூட்டணியும் நேரடியாக மோதுகின்றன

-தமிழன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset