நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியா கூட்டமைப்பில் சபா அதன் இறையாண்மையைத் தற்காக்கும்: ஹஜிஜி நோர் தகவல்

கோத்தா கினாபாலு: 

மலேசிய கூட்டமைப்பில் சபா மாநிலம் தொடர்ந்து நீடிக்கும் அதேவேளையில் அதன் இறையாண்மையைத் தற்காக்கும் என்று சபா மாநில முதலமைச்சர் டத்தோஶ்ரீ ஹஜிஜி நோர் கூறினார். 

சபா மாநிலம் பல்வேறு சவால்கள், சிக்கல்களைக் கடந்து வந்தாலும் அம்மாநிலம் தொடர்ந்து மலேசியா கூட்டமைப்பில் இடம்பெற்று வருகிறது. 

சபா விவகாரம் தொடர்பில் சில அந்நிய தரப்பு மேற்கொண்ட விண்ணப்பமானது நெதர்லாந்து உச்சநீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது. இது சபா மாநிலத்திற்கு அங்கு வசிக்கும் மக்களுக்கு நற்செய்தியாகும். 

மலேசியா கூட்டமைப்பில் தான் சபா மாநிலம் இருக்கிறது; தொடர்ந்து இருக்கும். யாராலும் சபா மாநிலத்தை மலேசியா கூட்டமைப்பிலிருந்து விலகி செல்ல முடியாது என்று பாடாங் மெர்டேக்காவில் நடைபெற்ற 61ஆவது மலேசிய தின கொண்டாட்டத்தில் உரையாற்றிய ஹஜிஜி நோர் இவ்வாறு கூறினார்.

-தமிழன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset