நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பேரா மாநில இந்திய முஸ்லிம் இயக்கத்திற்கு மௌலிதுர் ரசூல் விருது வழங்கப்பட்டது

ஈப்போ:

பேரா இந்திய முஸ்லிம் இயக்கத்திற்கு (பிரிம்) மௌலிதுர் ரசூல் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இவ்விருதை இயக்கத்தின்  தலைவர்  முஹம்மது ஆரிப் அலியா, பேரா சுல்தான் சுல்தான் நஸ்ரின் முய்சுதீன் ஷாவிடமிருந்து  பெற்றார். 

அவருக்கு 5,000 ரிங்கிட் ரொக்கப் பரிசுடன் சான்றிதழுடன் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

விருதை பெற்றுக்கொண்ட முஹம்மது ஆரிப் இறைவனுக்கு தனது நன்றியைத் தெரிவித்ததோடு, 

இந்த  விருதைப் பெற உதவிய அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டார்

கடவுள் நாடினால், சமூகத்திற்கு உதவும் வகையில் அதிகமான பணிகளைச் செய்ய இது எங்கள் தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு அதிக ஊக்கத்தை அளிக்கும் என்று அவர் கூறினார்.

தமது இயக்கம்  இதுவரை பல சமுக நல உதவிகளை வழங்கி வருவதுடன் வசதி குறைந்த மக்களுக்கு  அன்றாடத் தேவைகளுக்கு உதவுவதுடன் வீட்டுக்கு வீடு மார்க்க நடவடிக்கைகளும் அடங்கும்.

சங்கத்தின் மற்ற செயல் நடவடிக்கைக்கும், மார்க்க சொற்பொழிவுகள் போன்ற நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு இரண்டு கடைவீடுகளை பிரிம் வாங்கியுள்ளது.

எங்கள் நடவடிக்கைகளில் அன்னையர் தினம், தந்தையர் தினம், கருத்தரங்குகள் மற்றும் மாணவர்களுக்கான விருது வழங்கும் விழாக்கள் ஆகியவை அடங்கும் என்று அவர் மேலும் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset