செய்திகள் மலேசியா
ஆலயம் கட்டி விட்டால் மட்டும் போதாது; வழிபட பக்தர்கள் தேவை: கணபதிராவ்
ஷாஆலம்:
நாட்டில் பெரிய அளவில் ஆலயம் கட்டினால் மட்டும் போதாது வழிப்பட பக்தர்கள் தேவை.
கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வீ. கணபதிராவ் இதனை வலியுறுத்தினார்.
மலேசிய இந்து தர்ம மாமன்றத்தின் ஏற்பாட்டில் இடைநிலைப் பள்ளி மாணவர்களுக்கான 5 நாள் இந்து தர்ம அடிப்படை சமய வகுப்பு மிட்லன்ட்ஸ் தமிழ்ப்பள்ளியில் நடைபெற்றது.
இதுவொரு மகத்தான வகுப்பாகும். ஒவ்வொரு இந்துக்களும் கட்டாயம் செல்ல வேண்டிய வகுப்பு இதுவாகும்.
இதுபோன்ற சமய வகுப்புகளை ஆலயங்கள் நடத்த வேண்டும்.
தற்போது நாட்டில் ஆலயங்களை யார் பெரிதாக கட்டுவது என்ற போட்டி தான் நடக்கிறது.
உண்மையில் பெரிய அளவில் ஆலயம் கட்டினால் மட்டும் போதாது வழிப்பட பக்தர்கள் தேவை.
குறிப்பாக சமய விழிப்புணர்வு நிகழ்வுகளை ஆலயங்கள் அதிகரிக்க வேண்டும்.
மக்களிடையே சமய விழிப்புணர்வு இருந்தால் நம் சமயத்தை யாராலும் இழிவுபடுத்த முடியாது.
ஆகையால் சமுதாய மக்கள் முழு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று கணபதிராவ் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 19, 2024, 7:13 pm
நில நிர்வாகத்தை நவீனமயமாக்குமாறு மாநில அரசுக்கு பிரதமர் வலியுறுத்து
September 19, 2024, 6:55 pm
லெபனானில் தகவல் தொடர்பு சாதனங்களை ஆயுதங்களாகப் பயன்படுத்துவதை மலேசியா வன்மையாக கண்டிக்கிறது: வெளியுறவு அமைச்சு
September 19, 2024, 5:31 pm
மக்கோத்தா இடைத்தேர்தல்: தேசிய கூட்டணியின் தேர்தல் வாக்குறுதிகள் சனிக்கிழமை அறிவிக்கப்படும்
September 19, 2024, 5:29 pm
குளுவாங்கில் ஏற்பட்ட சாலை விபத்து: 4 சிறுவர்கள் உட்பட 10 பேர் காயம்
September 19, 2024, 5:27 pm
காவல்துறை உதவியாளருக்கு லஞ்சம்: இரு மியன்மார் நாட்டவர்கள் ஐந்து நாட்களுக்குத் தடுத்து வைப்பு
September 19, 2024, 4:50 pm
MOU வரைவு அறிக்கைக்கு எதிர்கட்சியினர் பதில் அளிக்கலாம்: துணைப்பிரதமர் டத்தோஶ்ரீ ஃபாடில்லா யூசோஃப்
September 19, 2024, 4:48 pm
குளோபல் இக்வானின் 19 உறுப்பினர்களுக்கு 7 நாள் தடுப்பு காவல்
September 19, 2024, 4:47 pm
முக்கிய சாட்சிக்கு எதிராக லிம் குவான் எங் போலிசில் புகார் செய்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது
September 19, 2024, 4:44 pm