நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆலயம் கட்டி விட்டால் மட்டும் போதாது; வழிபட பக்தர்கள் தேவை: கணபதிராவ்

ஷாஆலம்:

நாட்டில் பெரிய அளவில் ஆலயம்  கட்டினால் மட்டும் போதாது வழிப்பட பக்தர்கள் தேவை.

கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வீ. கணபதிராவ் இதனை வலியுறுத்தினார்.

மலேசிய இந்து தர்ம மாமன்றத்தின் ஏற்பாட்டில் இடைநிலைப் பள்ளி மாணவர்களுக்கான 5 நாள் இந்து தர்ம அடிப்படை சமய வகுப்பு மிட்லன்ட்ஸ் தமிழ்ப்பள்ளியில் நடைபெற்றது.

இதுவொரு மகத்தான வகுப்பாகும். ஒவ்வொரு இந்துக்களும் கட்டாயம் செல்ல வேண்டிய வகுப்பு இதுவாகும்.

இதுபோன்ற சமய வகுப்புகளை ஆலயங்கள் நடத்த வேண்டும்.

தற்போது நாட்டில் ஆலயங்களை யார் பெரிதாக கட்டுவது என்ற போட்டி தான் நடக்கிறது.

உண்மையில் பெரிய அளவில் ஆலயம் கட்டினால் மட்டும் போதாது வழிப்பட பக்தர்கள் தேவை.

குறிப்பாக சமய விழிப்புணர்வு நிகழ்வுகளை ஆலயங்கள் அதிகரிக்க வேண்டும்.

மக்களிடையே சமய விழிப்புணர்வு இருந்தால் நம் சமயத்தை யாராலும் இழிவுபடுத்த முடியாது.

ஆகையால் சமுதாய மக்கள் முழு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று கணபதிராவ் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset