செய்திகள் மலேசியா
பள்ளிகளில் சமயக் கல்வியை அமல்படுத்தும் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டையாக இருக்க வேண்டாம்: ராதாகிருஷ்ணன்
ஷாஆலம்:
தமிழ், இடைநிலைப் பள்ளிகளில் சமயக் கல்வியை அமல்படுத்தும் முயற்சிகளுக்கு யாரும் முட்டுக்கட்டையாக இருக்க வேண்டாம்.
மலேசிய இந்து தர்ம மாமன்றத்தின் தலைவர் ராதாகிருஷ்ணன் இதனை வலியுறுத்தினார்.
மலேசிய இந்து தர்ம மாமன்றத்தின் ஏற்பாட்டில் இடைநிலைப் பள்ளி மாணவர்களுக்கான 5 நாள் இந்து தர்ம அடிப்படை சமய வகுப்பு மிட்லன்ட்ஸ் தமிழ்ப்பள்ளியில் நடைபெற்றது.
கிட்டத்தட்ட 100 மாணவர்கள் இந்த வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
இந்த வகுப்புகளை பள்ளிகளில் நடத்த வேண்டும் என்பது தான் மலேசிய இந்து சங்கத்தின் போராட்டமாக உள்ளது.
இதற்கான பாடப் புத்தகங்களும் தயார் நிலையில் உள்ளது. ஆனால் இம் முயற்சிக்கு வெற்றி கிடைக்காமலே உள்ளது.
குறிப்பாக இத்தகு முயற்சிக்கு முட்டுக் கட்டையாக இருப்பவர்களும் நம்மவர்கள் தான் என்று நினைக்கும் போது வேதனையாக உள்ளது.
இருந்தாலும் இம்முயற்சியை மலேசிய இந்து தர்ம மாமன்றம் என்றைக்கும் கைவிடாது என்று அவர் கூறினார்.
இதனிடையே இடைநிலைப் பள்ளி மாணவர்களுக்கான 5 நாள் இந்து தர்ம அடிப்படை சமய வகுப்பு வெற்றிகரமாக நடைபெறுவதற்கு பலர் ஒத்துழைப்பை தந்துள்ளனர்.
இந்த ஒத்துழைப்புக்கும் ஆதரவுக்கும் நன்றி என்று ராதாகிருஷ்ணன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 19, 2024, 7:13 pm
நில நிர்வாகத்தை நவீனமயமாக்குமாறு மாநில அரசுக்கு பிரதமர் வலியுறுத்து
September 19, 2024, 6:55 pm
லெபனானில் தகவல் தொடர்பு சாதனங்களை ஆயுதங்களாகப் பயன்படுத்துவதை மலேசியா வன்மையாக கண்டிக்கிறது: வெளியுறவு அமைச்சு
September 19, 2024, 5:31 pm
மக்கோத்தா இடைத்தேர்தல்: தேசிய கூட்டணியின் தேர்தல் வாக்குறுதிகள் சனிக்கிழமை அறிவிக்கப்படும்
September 19, 2024, 5:29 pm
குளுவாங்கில் ஏற்பட்ட சாலை விபத்து: 4 சிறுவர்கள் உட்பட 10 பேர் காயம்
September 19, 2024, 5:27 pm
காவல்துறை உதவியாளருக்கு லஞ்சம்: இரு மியன்மார் நாட்டவர்கள் ஐந்து நாட்களுக்குத் தடுத்து வைப்பு
September 19, 2024, 4:50 pm
MOU வரைவு அறிக்கைக்கு எதிர்கட்சியினர் பதில் அளிக்கலாம்: துணைப்பிரதமர் டத்தோஶ்ரீ ஃபாடில்லா யூசோஃப்
September 19, 2024, 4:48 pm
குளோபல் இக்வானின் 19 உறுப்பினர்களுக்கு 7 நாள் தடுப்பு காவல்
September 19, 2024, 4:47 pm
முக்கிய சாட்சிக்கு எதிராக லிம் குவான் எங் போலிசில் புகார் செய்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது
September 19, 2024, 4:44 pm