நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

1 லட்சத்திற்கும் அதிகமான மலேசிய சுற்றுப்பயணிகள் தென் தாய்லாந்திற்கு வருகை புரிந்து விடுமுறையைக் கழித்தனர் 

பாடாங் பெசார்: 

மலேசியாவில் தொடர் நீண்ட விடுமுறையை முன்னிட்டு தென் தாய்லாந்து பகுதிக்கு 1 லட்சத்திற்கும் அதிகமான மலேசிய சுற்றுப்பயணிகள் வருகை புரிந்து தங்களின் விடுமுறையைக் கழித்துள்ளனர்

இதனால் அங்குள்ள வட்டார பொருளாதார நடவடிக்கைகளில் பெரும் வருவாய் எட்டப்பட்டிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது 

36 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலேசியர்கள் சொங்களா பிராந்தியத்தைக் கடந்துள்ளனர். அவர்கள் யாவரும் சடாஓ, டான் ப்ராகோப், மற்றும் பாடாங் பெசார் ஆகிய நுழைவாயில்களில்  தாய்லாந்து நாட்டிற்குள் நுழைந்துள்ளனர். 

மலேசியர்கள் தொடர் விடுமுறைகளை நல்ல முறையில் கழித்துள்ள வேளையில்  அங்குள்ள பொருளாதார நடவடிக்கைகள் மேம்பட்டுள்ளதாக சொங்களா தங்கும் விடுதி மற்றும் சுற்றுலா அமைப்பின் தலைவர் சித்திபோங் சித்திப்ராபா குறிப்பிட்டார்.

-தமிழன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset