நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தேமு வேட்பாளர் சையத் ஹுசைனை வெற்றிப்பெற செய்வதே எங்களின் இலக்காகும்: வீ கா சியோங் 

கோலாலம்பூர்: 

எதிர்வரும் மக்கோத்தா சட்டமன்ற இடைத்தேர்தலில் தேசிய முன்னணி வேட்பாளர் சையத் ஹுசைன் சையத் அப்துல்லாவை வெற்றிப்பெற செய்வதே ஒற்றுமை அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும். 

ஒற்றுமை அரசாங்கத்தில் உள்ள ஜசெக, மசீச ஆகிய கட்சிகளை உட்படுத்தி அனைவரும் அவரை வெற்றிப்பெற செய்ய வேண்டும் என்று ம.சீ.ச தேசிய தலைவர் டத்தோஶ்ரீ வீ கா சியோங் கூறினார் 

மேலும், சீன வாக்காளர்களிடமிருந்து மிகப்பெரிய ஆதரவினை சையத் ஹுசைன் பெறுவார் என்று தாம் எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார் 

சீனப்பள்ளியிலிருந்து வந்த அவருக்கு அதன் கலாச்சாரங்கள், படிநிலைகள் பற்றி நன்கு அறிந்திருப்பார் என்று ஆயிர் ஹித்தாம் நாடாளுமன்ற உறுப்பினருமான வீ கா சியோங் இவ்வாறு குறிப்பிட்டார். 

மக்கோத்தா சட்டமன்ற இடைத்தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் முன்கூட்டியே வாக்களிப்பு செப்டம்பர் 24ஆம் தேதி நடைபெறுகிறது

-தமிழன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset