நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

20 முறை கத்தியால் குத்தப்பட்ட ஆடவர் மரணம்: பெட்டாலிங் ஜெயாவில் பரபரப்பு 

பெட்டாலிங் ஜெயா: 

நேற்றிரவு 36 வயது மதிக்கத்தக்க ஆடவர் ஒருவர் 20 முறை கத்தியால் குத்தப்பட்டு மரணமடைந்தார். இந்த சம்பவம் பெட்டாலிங் ஜெயாவில் உள்ள பண்டார் ஶ்ரீ டமான்சாராவில் உள்ள ஆடம்பர அடுக்ககத்தில் நிகழ்ந்தது 

அடையாளம் தெரியாத நபர் ஒருவருக்கும் பாதிக்கப்பட்ட நபருக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட நபரின் அண்டை வீட்டுக்காரர் போலிஸ் தரப்புக்குத் தகவல் அளித்தார் என்று பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல்துறை தலைவர் ஷாருல்நிசாம் ஜஃபார் கூறினார் 

சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் பாதிக்கப்பட்ட நபர் கத்திக்குத்துக்கு ஆளாகி மரணமடைந்தார் என்று உறுதிப்படுத்தினார். 

கொலைக்கான காரணங்கள் யாவும் போலிஸ் அடையாளம் கண்டு வருவதாக அவர் தெரிவித்த நிலையில் பாதிக்கப்பட்ட நபர் தனியாக வாழ்ந்து வந்ததாக அவர் சொன்னார். 

உடற்கூறு ஆய்வுக்காக உடல் சுங்கை பூலோ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

-தமிழன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset