செய்திகள் மலேசியா
20 முறை கத்தியால் குத்தப்பட்ட ஆடவர் மரணம்: பெட்டாலிங் ஜெயாவில் பரபரப்பு
பெட்டாலிங் ஜெயா:
நேற்றிரவு 36 வயது மதிக்கத்தக்க ஆடவர் ஒருவர் 20 முறை கத்தியால் குத்தப்பட்டு மரணமடைந்தார். இந்த சம்பவம் பெட்டாலிங் ஜெயாவில் உள்ள பண்டார் ஶ்ரீ டமான்சாராவில் உள்ள ஆடம்பர அடுக்ககத்தில் நிகழ்ந்தது
அடையாளம் தெரியாத நபர் ஒருவருக்கும் பாதிக்கப்பட்ட நபருக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட நபரின் அண்டை வீட்டுக்காரர் போலிஸ் தரப்புக்குத் தகவல் அளித்தார் என்று பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல்துறை தலைவர் ஷாருல்நிசாம் ஜஃபார் கூறினார்
சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் பாதிக்கப்பட்ட நபர் கத்திக்குத்துக்கு ஆளாகி மரணமடைந்தார் என்று உறுதிப்படுத்தினார்.
கொலைக்கான காரணங்கள் யாவும் போலிஸ் அடையாளம் கண்டு வருவதாக அவர் தெரிவித்த நிலையில் பாதிக்கப்பட்ட நபர் தனியாக வாழ்ந்து வந்ததாக அவர் சொன்னார்.
உடற்கூறு ஆய்வுக்காக உடல் சுங்கை பூலோ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
-தமிழன்
தொடர்புடைய செய்திகள்
September 18, 2024, 10:27 pm
ஹலால் சான்றிதழுக்கு தன்னார்வத்தின் அடிப்படையில் விண்ணப்பிக்கலாம் என அரசு முடிவு: ஜாஹித்
September 18, 2024, 10:07 pm
சுங்கைபூலோ நாடாளுமன்ற தொகுதி மக்கள் நலத் திட்டங்களுக்காக 3.9 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு: டத்தோஸ்ரீ ரமணன்
September 18, 2024, 9:09 pm
சொக்சோவுடனான மக்கள் சந்திப்பு சிக்கல்களுக்கு தீர்வை ஏற்படுத்துகிறது: சிவக்குமார் வரவேற்பு
September 18, 2024, 6:39 pm
1.81 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 30 முதலை குட்டிகள், 14 இந்திய நட்சத்திர ஆமைகள் கடத்திய ஆடவர் கைது
September 18, 2024, 6:26 pm
ரோன் 97, டீசல் விலைகள் 6 சென் குறைந்தது
September 18, 2024, 6:03 pm
மூவார் ஶ்ரீ நாகமலை சுவாமி ஆலயத்தின் 50ஆம் ஆண்டு வருடாந்திர திருவிழா
September 18, 2024, 6:00 pm
1 எம்டிபி விசாரணையில் நியாயமான விசாரணை மறுக்கப்பட்டது: நஜீப் வழக்கறிஞர்
September 18, 2024, 5:53 pm
ஆலயம் கட்டி விட்டால் மட்டும் போதாது; வழிபட பக்தர்கள் தேவை: கணபதிராவ்
September 18, 2024, 5:47 pm