நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

RXZ மோட்டார் குழுவைச் சேர்ந்த மூன்று பேர் வெவ்வேறு விபத்துகளில் மரணமடைந்தனர்

கோலத் திரெங்கானு:

RXZ 6.0 மோட்டார் குழுவைச் சேர்ந்த மூன்று பேர் மூன்று வெவ்வேறு விபத்துகளில் மரணமடைந்தனர்.

திரெங்கானு போலிஸ் தலைவர் டத்தோ முஹம்மத் கைரி கைரூடின் இதனை கூறினார்.

RXZ 6.0 மோட்டார் குழுவைச் சேர்ந்தவர்கள் கூட்டாக மோட்டார் சைக்கிள் பயணங்களை மேற்கொண்டனர். இதில் பங்கேற்றவர்கள் மூன்று விபத்துகளில் சிக்கிக் கொண்டனர்.

அதில் இரண்டு விபத்துகள் பந்தாய் திமோர் 2 நெடுஞ்சாலையில் நிகழ்ந்தது. மற்றொரு விபத்து கோலத் திரெங்கானு - குவாந்தான் சாலையில் நிகழ்ந்தது.

இதில் பத்துகாஜாவைச் சேர்ந்த 58 வயது அப்துல் சலிம், ஜெம்பூலைச் சேர்ந்த முஹம்மத் பிர்தாவ்ஸ், தெமர்லோவைச் சேர்ந்த அஹ்மத் அமீர் ஆகியோர் மரணமடைந்தனர் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset