நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

குளோபல் இக்வான் முன்னாள் உறுப்பினர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுவர்: அமைச்சர் நயீம் மொக்தார் 

புத்ராஜெயா:

குளோபல் இக்வான் ஹோல்டிங்கின் முன்னாள் உறுப்பினர்கள், பின்பற்றுபர்களும் விசாரணைக்கு உட்படுத்தப்படுவர்.

பிரதமர் துறையின் சமய விவகாரங்களுக்கான அமைச்சர் டத்தோ டாக்டர் முஹம்மத் நயீம் மொக்தார் இதனை கூறினார்.

குளோபல் இக்வான் ஹோல்டிங்ஸ் அது சார்ந்த சமூக நல இல்லங்கள் தொடர்பான பிரச்சினை நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தை விசாரிக்க அமைச்சின் கீழ் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக் குழுவின் விசாரணைக்கு உதவ குளோபல் இக்வான் முன்னாள் உறுப்பினர்கள், பின்பற்றுபவர்கள், அமைப்பின் அனுதாபிகள் ஆகியோர் விசாரணைக்கு அழைக்கப்படுவர்.

விசாரணைக்கு பின் அது தொடர்பான அறிக்கை தயார் செய்யப்படும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset