நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நபிகள் நாயகம் உருவாக்கிய மதீனா சமூகத்தை பின்பற்றி சிறந்த முன்மாதிரியாக முஸ்லிம்கள் திகழ வேண்டும்: பிரதமர் அன்வார்

புத்ராஜெயா: 

நபிகள் நாயகத்தை சிறந்த முன்மாதிரியாக கொண்ட மதீனா சமுதாயத்தை பின்பற்றி முஸ்லிம்கள் வாழ வேண்டும் என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார்.

உலகமே வறட்சிப் புயலால் பாதிக்கப்பட்டு வரும் வேளையில், சமுதாயத்தின் சிறந்த முன்னோடியான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை 'உஸ்வத்துன் ஹஸனா' அல்லது சிறந்த முன்மாதிரியாக கொண்டு  முஸ்லிம்கள் தொடர்ந்து உருவாக வேண்டும்.

இறைவனின் திருத் தூதரின் ஆளுமையின் அடிப்படையில் மட்டுமல்லாமல், நாடு, சமூகம், குடும்பத்தின் தலைமைத்துவம் உட்பட பெருமானார் உருவாக்கிய மதீனா சமூக சூழலில் வாழ நாம் கவனம் செலுத்தப்பட வேண்டும். பல்லின மக்களை உள்வாங்கி அரவணைத்து ஆட்சி செய்த மதீனா சமுதாயம் போல் நாம் சகோதரத்துவத்துடன் பிறருடன் நடந்து கொள்ள வேண்டும்.

ஒரு நாகரீகமான இலட்சியங்களை மடானி அரசாங்கம் கொண்டுள்ளது.

இது நீதி, கருணையின் அடிப்படையில் ஒற்றுமையின் கீழ் கட்டமைக்க வேண்டும்.

புத்ராஜெயாவில் நடைபெற்ற தேசிய மௌலிதுர் ரசூல் விழாவுக்கு பின் பிரதமர் இவ்வாறு கூறினார்.

இவ்விழாவில் மாமன்னர் உட்பட 6,000த்திற்கும் மேற் பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset