நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சரவா மாநில முஃப்தி 2024ஆம் ஆண்டுக்கான மௌலிதுர் ரசூல் பிரதான விருதைப் பெற்றார்

புத்ரா ஜெயா:

சரவா மாநில முஃப்தி 2024ஆம் ஆண்டுக்கான மௌலிதுர் ரசூல் பிரதான விருதைப் பெற்றார்.

மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் இந்த விருதை வழங்கினார்.

தேசிய அளவிலான மௌலிதுர் ரசூல் விழா புத்ராஜெயாவில் சர்வதேச மாநாட்டு மையத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

இவ்விழாவில் முக்கிய அங்கமாக சரவா மாநில முஃப்தி கிப்லி யாசினுக்கு மௌலிதுர் ரசூல் விருது வழங்கப்பட்டது 

இஸ்லாமிய மத விவகாரங்களுக்கான தேசிய மன்றத்தின் 50,000 ரிங்கிட் ரொக்கம், கிண்ணம், பதக்கம், பாராட்டுச் சான்றிதழ் ஆகியவற்றை அவர் பெற்றார்.

சரவாக்கில் உள்ள பல்வேறு இனங்களின் கலாச்சார பிரசங்க நடவடிக்கைகளில் கிப்லியின் பங்களிப்பு அளப்பரியது.

இதனால் சகோதரத்துவம் தொடர்ந்து வலுவாகவும் பராமரிக்கப்படுகிறது.

இதன் அடிப்படையில் அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டது.

May be an image of 6 people, dais and text

மாநில முஃப்தி கிப்லி யாசினுக்கு மௌலிதுர் ரசூல் விருது

அவரைத் தொடர்ந்து அறுவருக்கு பேரரசர் விருந்தளித்து கௌரவித்தார். 

1. Datin Aminah Zakaria 
2. Mr. Jamal Tun Sakaran
3. பேராசிரியர் டாக்டர் Khatijah Yusoff 
4. பேராசிரியர் Emeritus Dr. Shaharir Mohamad Zain  
5. Sariah Ibrahim
6. Micheal Tong Wai Siong (Uncle Mike) ஆகியோர் விருது பெற்றனர். 

நிகழ்ச்சியில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், பிரதமர் துறையின் இஸ்லாமிய சமய மேம்பாட்டு விவகாரங்களுக்கான அமைச்சர் டத்தோ டாக்டர் நயீம் முக்தார் உட்பட பல பிரமுகர்களும் வெளிநாட்டுத் தூதர்களும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

- ஃபிதா & பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset