நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புதுடில்லிக்கான பயணத்தில் மஇகாவுக்கும் எனக்கும் முன்னுரிமை வழங்கிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாருக்கு நன்றி: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்

ஷாஆலம் -

இந்தியத் தலைநகர் புதுடில்லிக்கான பயணத்தில் மஇகாவுக்கும் எனக்கும் முன்னுரிமை வழங்கிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாருக்கு நன்றி.

மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்ஏ விக்னேஸ்வரன் இதனை கூறினார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அண்மையில் புதுடில்லிக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டார்.

இப் பயணத்தின் போது அவர் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.

இந்தப் பயணத்தின் போது மஇகாவுக்கும் அதன் தலைவராக எனக்கும் முன்னுரிமை வழங்கி புதுடில்லிக்கு பிரதமர் அழைத்துச் சென்றார்.

இந்த அஙகீகாரத்திற்கும் பிரதமருக்கும் மஇகா சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
அதே வேளையில் பிரதமரின் இப்பயணம் இந்தியாவுக்கும் மலேசியாவுக்கும் இருக்கும் உறவை மேலும் வலுப்படுத்தி உள்ளது.

இந்த நட்புறவு தொடர்வதற்கும் வழிவகுத்துள்ளது என்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset