நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோல சிலாங்கூர் ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி ஆலயத்தின் மகா கும்பாபிஷேக விழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்

கோல சிலாங்கூர்:

கோல சிலாங்கூர் ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி ஆலயத்தின் மகா கும்பாபிஷேக விழா சிறப்பான முறையில் நடைபெற்றது.

மழையையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

கோல சிலாங்கூர் ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி ஆலயம் மலேசிய ரீதியில் புகழ் பெற்ற ஆலயமாகும்.

சிலாங்கூர் மாநிலத்தில் பத்துமலைக்கு அடுத்து இங்கு தான் தைப்பூசம் வெகுச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

அவ்வகையில் ஆலயத்தின் 7ஆவது மகா கும்பாபிஷேக விழா ஆலயத் தலைவர் கண்ணதாசன் பரமசிவம் தலைமையில் நடைபெற்றது.

காலை முதல் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. சரியாக காலை 9.30 மணிக்கு ஆலய கலசங்களுக்கு கும்ப நீர் ஊற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது என்று ஆலயத்தின் துணைச் செயலாளர் இன்பசேகரன் கூறினார்.

கும்பாபிஷேக விழாவை தொடர்ந்து ஆலயத்தில் 48 நாட்கள் மண்டல பூஜை நடைபெறவுள்ளது.

இப் பூஜைகளிலும் பக்தர்கள் திரளாக கலந்து கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset