செய்திகள் உலகம்
ஜப்பான் ஓட்டுநர்கள் இல்லாத அதிவேக ரயில்களை அறிமுகம் செய்யவுள்ளது
தோக்கியோ:
ஜப்பான் ஓட்டுநர்கள் இல்லாத அதிவேக ரயில்களை உருவாக்கத் திட்டமிடுகிறது .
2030-ஆம் ஆண்டுகளின் நடுப்பகுதியில் ஷின்கான்சென் (Shinkansen) அதிவேக ரயில்கள் இயங்கும் என்று ஈஸ்ட் ஜப்பான் ரயில்வே (East Japan Railway) நிறுவனம் தெரிவித்தது.
2028-ஆண்டு தானியக்க ரயில்கள் முதலில் அறிமுகப்படுத்தப்படும் என்று (East Japan Railway நிறுவனம் கூறியது.
ஆயினும் ஓட்டுநர்கள் ரயில்களில் இருப்பார்கள்.
2029-ஆம் ஆண்டில் ஓட்டுநர்கள் இல்லாத அதிவேக ரயில்கள் பயணிகள் பயன்படுத்தாத ரயில் பாதையில் சோதிக்கப்படும்.
அந்த முயற்சி சுமுகமாக இருந்தால் 2030-ஆம் ஆண்டுகளில் அவை பயணிகள்-ரயில் செல்லும் பாதையில் இயங்கத் தொடங்கும்.
இந்நிலையில் ஓட்டுநர் இல்லாத ரயில்கள் ஊழியர்கள் பணிபுரியும் விதத்தில் மாற்றங்களைக் கொண்டுவரும் என்று ஈஸ்ட் ஜப்பான் ரயில்வே நிறுவனம் தெரிவித்தது.
ரயில்வே தொழில்நுட்பத்தைப் புதுப்பிப்பதன் மூலம் ஊழியர் பற்றாக்குறைக்குத் தீர்வு காணவும் நிறுவனம் முனைகிறது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
September 17, 2024, 12:58 pm
சீனாவில் புயலால் 100 விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன
September 17, 2024, 12:51 pm
வெடிப்பதற்கு முன் டைட்டான் கப்பல் தந்த கடைசிச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது
September 17, 2024, 12:21 pm
கொட்டி தீர்க்கும் கனமழை: மத்திய ஐரோப்பிய நாடுகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன
September 17, 2024, 11:18 am
சிங்கப்பூரின் ஆகக் கடைசி Times புத்தகக் கடை மூடப்படுகிறது
September 17, 2024, 10:54 am
70 ஆண்டுகளில் காணாத வகையில் ஷாங்ஹாயை உலுக்கும் பெபின்கா புயல்
September 16, 2024, 4:58 pm
மூன் கேக் சைவமா, அசைவமா?: BreadTalk விளம்பரத்தால் குழப்பம்
September 16, 2024, 1:55 pm
"தோப்பாகிய தனிமரம்" எம்.எச்.எம். அஷ்ரப் நினைவேந்தல் நிகழ்வும் இளைஞர் மாநாடும்
September 16, 2024, 11:15 am
டொனால்ட் டிரம்ப் மீது மீண்டும் துப்பாக்கி சூட்டு தாக்குதல்: அமெரிக்காவில் பரபரப்பு
September 16, 2024, 10:25 am
சிங்கப்பூருக்கும் சீனாவின் ஷாங்ஹாய் நகருக்கும் இடையிலான 11 விமானப் பயணங்கள் ரத்து
September 15, 2024, 1:48 pm