நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஜப்பான் ஓட்டுநர்கள் இல்லாத அதிவேக ரயில்களை அறிமுகம் செய்யவுள்ளது

தோக்கியோ: 


ஜப்பான் ஓட்டுநர்கள் இல்லாத அதிவேக ரயில்களை உருவாக்கத் திட்டமிடுகிறது .

2030-ஆம் ஆண்டுகளின் நடுப்பகுதியில் ஷின்கான்சென் (Shinkansen) அதிவேக ரயில்கள் இயங்கும் என்று ஈஸ்ட் ஜப்பான் ரயில்வே (East Japan Railway) நிறுவனம் தெரிவித்தது.

2028-ஆண்டு தானியக்க ரயில்கள் முதலில் அறிமுகப்படுத்தப்படும் என்று (East Japan Railway நிறுவனம் கூறியது. 

ஆயினும் ஓட்டுநர்கள் ரயில்களில் இருப்பார்கள்.

2029-ஆம் ஆண்டில் ஓட்டுநர்கள் இல்லாத அதிவேக ரயில்கள் பயணிகள் பயன்படுத்தாத ரயில் பாதையில் சோதிக்கப்படும்.

அந்த முயற்சி சுமுகமாக இருந்தால் 2030-ஆம் ஆண்டுகளில் அவை பயணிகள்-ரயில் செல்லும் பாதையில் இயங்கத் தொடங்கும்.

இந்நிலையில் ஓட்டுநர் இல்லாத ரயில்கள் ஊழியர்கள் பணிபுரியும் விதத்தில் மாற்றங்களைக் கொண்டுவரும் என்று ஈஸ்ட் ஜப்பான் ரயில்வே நிறுவனம் தெரிவித்தது. 

ரயில்வே தொழில்நுட்பத்தைப் புதுப்பிப்பதன் மூலம் ஊழியர் பற்றாக்குறைக்குத் தீர்வு காணவும் நிறுவனம் முனைகிறது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset