செய்திகள் உலகம்
சிங்கப்பூரில் ஒரு வாரத்திற்கு நுழைவாயில்களில் தீவிரப் பாதுகாப்புச் சோதனை: குடிநுழைவுச் சோதனைச் சாவடிகள் ஆணையம்
சிங்கப்பூர்:
சிங்கப்பூரில் இன்றிலிருந்து வரும் 14-ஆம் தேதி வரை அனைத்துக் குடிநுழைவுச் சோதனைச் சாவடிகளிலும் தீவிரப் பாதுகாப்புச் சோதனைகள் நடத்தப்படும் என்று சிங்கப்பூர் குடிநுழைவுச் சோதனைச் சாவடிகள் ஆணையம் ஓர் அறிக்கையில் தெரிவித்தது.
பாதுகாப்புச் சூழலைக் கருத்திற்கொண்டு சோதனைகள் நடத்தப்படுவதாகக் குடிநுழைவுச் சோதனைச் சாவடிகள் ஆணையம் தெரிவித்தது.
நிலம், ஆகாயம், கடல் வழி சிங்கப்பூருக்கு வரும் அனைத்துப் பயணிகளும் தீவிரச் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
கத்தோலிக்கச் சமயத் தலைவர் போப் பிரான்சிஸ் வரும் 11ஆம் தேதியிலிருந்து 13-ஆம் தேதிவரை சிங்கப்பூரில் இருப்பார்.
கடந்த வாரம் போப் இந்தோனேசியாவில் இருந்தபோது அவரைத் தாக்க முற்பட்ட 7 சந்தேக நபர்களைக் காவல்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
November 24, 2025, 7:17 pm
மீண்டும் இஸ்ரேல் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்
November 21, 2025, 9:33 pm
துபாய் விமான கண்காட்சியில் இந்திய விமானம் விபத்து: விமானி உயிரிழந்தார்
November 17, 2025, 10:58 pm
MalaysiaNow ஊடகத்தளத்திற்குத் தடை விதித்தது சிங்கப்பூர்
November 16, 2025, 9:11 pm
அமெரிக்க அதிபர் ட்ரம்பின் குடியரசுக் கட்சியில் பெரும் விரிசல்: டெய்லர் கிரீனுடன் மோதல் முற்றுகிறது
November 16, 2025, 9:49 am
ஜப்பானுக்குச் செல்லாதீர்கள்: சீனர்களை எச்சரிக்கும் சீனா
November 15, 2025, 4:12 pm
மாட்டிறைச்சி, காபிக்கு வரிவிலக்கு: டிரம்ப் அறிவிப்பு
November 15, 2025, 4:01 pm
MalaysiaNow நாளேட்டுக்குச் சிங்கப்பூர் POFMA சட்டத்தின்கீழ் திருத்த உத்தரவு
November 14, 2025, 3:31 pm
