நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

விஜயலட்சுமி குடும்பத்திற்கு வழங்கப்பட்ட உதவி நிதியில் திருப்தி இல்லை; ஓர் உயிரின் மதிப்பு 30,000 ரிங்கிட்டா?: டத்தோஸ்ரீ சரவணன் கேள்வி

கோலாலம்பூர்:

ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் விஜயலட்சுமி குடும்பத்திற்கு வழங்கப்பட்ட உதவி நிதியில் திருப்தி இல்லை.

ஒரு உயிரின் மதிப்பு 30,000 ரிங்கிட்டா என்று மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் கேள்வி எழுப்பினார்.

மஇகா ஆரம்ப காலத்தில் இருந்தே இந்திய சமுதாயத்திற்காக குரல் கொடுத்து வருகிறது.

ஆனால், இப்போது சமுதாயப் பிரச்சினைகளுக்கு யார் குரல் கொடுப்பார்கள் என்ற கேள்வி எழுகிறது.

குறிப்பாக ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் நிகழ்ந்த நில அமிழ்வு சம்பவத்தில் இந்தியாவைச் சேர்ந்த விஜயலட்சுமி புதையுண்டு மரணமடைந்தார்.

அவரின் குடும்பத்தாருக்கு 30 ஆயிரம் ரிங்கிட் உதவி நிதி வழங்கப்பட்டது. இந்த உதவித் தொகையில் மஇகாவுக்கு திருப்தி இல்லை.

ஓர் உயிரின் விலை வெறும் 30 ஆயிரம் ரிங்கிட் மட்டும் தானா?

நாளைக்கு மலேசியர்களுக்கு இதுபோன்று நடந்தால் அதற்கும் 30 ஆயிரம் ரிங்கிட் மட்டும் தானா என்ற கேள்வி எழுகிறது.

இதுபோன்ற பிரச்சினைகளுக்கு பதவியில் உள்ளவர்கள் குரல் கொடுக்க வேண்டும். ஆனால் அப்படி யாரும் குரல் எழுப்பாதது வருத்தம் தான்.

விஜயலட்சுமி மரணம் ஒரு அலட்சியத்தால் நடந்திருக்கலாம். இது தொடர்பில் வழக்கு தொடரலாம்.

ஆனால் இந்த வழக்கிற்கு விஜயலட்சுமி குடும்பத்தினர் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

அவரின் குடும்பத்தாரிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின் மஇகா உரிய நடவடிக்கைகள் எடுக்கும் என்று டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset