செய்திகள் உலகம்
வங்கதேசம் மாணவர்கள் மீண்டும் போராட்ட அறிவிப்பால் பதற்றம்
டாக்கா:
வங்கதேசத்தில் இடஒதுக்கீடுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற மாணவர் குழுத் தலைவர்கள் அரசுடனான பேச்சுவார்த்தையை நிராகரித்து, போராட்டத்துக்கான அழைப்பை விடுத்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை முதல் அரசுக்கு எதிரான போராட்டதை தீவிரப்படுத்தப்படும் என்றும் இதற்காக அரசு இயந்திரம் தங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். இதனால் அங்கு மீண்டும் வன்முறை வெடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் அந்த நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா சனிக்கிழமை இரவு 3 மணி நேரம் அவசர ஆலோசனை நடத்தினார்.
ஷேக் ஹசீனா பதவி விலகுவதை வலியுறுத்தி மாணவர்கள் குழுத் தலைவர்கள் பேச்சுவார்த்தைக்கு மறுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வங்கதேசத்தில் அரசுப் பணிகளில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்ட 30 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து அண்மையில் வன்முறைப் போராட்டங்கள் நடைபெற்றன. அதில் 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அதன்பின் இந்த இடஒதுக்கீட்டை 5 சதவீதமாக குறைத்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
January 30, 2026, 4:36 pm
அமெரிக்காவில் கடும் குளிர் தாக்கம்: 30 பேர் உயிரிழப்பு
January 29, 2026, 1:59 pm
தாய்லாந்து காட்டு யானைகளுக்கு கர்ப்பத் தடுப்பு ஊசி
January 29, 2026, 10:33 am
கொலம்பியாவில் விமான விபத்து: 15 பேர் உயிரிழப்பு
January 19, 2026, 3:41 pm
பெக்கான்பாருவில் ரோஹிங்கியா மக்கள் போராட்டம்: உதவித் தொகை அதிகரிக்க கோரிக்கை
January 19, 2026, 3:06 pm
மாட்ரிட் அருகே அதிவேக ரயில்கள் மோதல்: 21 பேர் பலி
January 18, 2026, 7:06 pm
காணாமல்போன இந்தோனேசியக் கண்காணிப்பு விமானத்தின் சிதைவுகள் கண்டுபிடிப்பு
January 16, 2026, 4:19 pm
ஹாங்காங் மாலில் கத்திமுனையில் மிரட்டல்: போலிஸ் துப்பாக்கிச்சூட்டில் ஆடவர் பலி
January 15, 2026, 9:32 pm
எதிர்த்தரப்புத் தலைவர் பொறுப்பிலிருந்து பிரித்தம் சிங் நீக்கப்படுகிறார்: பிரதமர் வோங்
January 15, 2026, 9:24 pm
