
செய்திகள் உலகம்
வங்கதேசம் மாணவர்கள் மீண்டும் போராட்ட அறிவிப்பால் பதற்றம்
டாக்கா:
வங்கதேசத்தில் இடஒதுக்கீடுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற மாணவர் குழுத் தலைவர்கள் அரசுடனான பேச்சுவார்த்தையை நிராகரித்து, போராட்டத்துக்கான அழைப்பை விடுத்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை முதல் அரசுக்கு எதிரான போராட்டதை தீவிரப்படுத்தப்படும் என்றும் இதற்காக அரசு இயந்திரம் தங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். இதனால் அங்கு மீண்டும் வன்முறை வெடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் அந்த நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா சனிக்கிழமை இரவு 3 மணி நேரம் அவசர ஆலோசனை நடத்தினார்.
ஷேக் ஹசீனா பதவி விலகுவதை வலியுறுத்தி மாணவர்கள் குழுத் தலைவர்கள் பேச்சுவார்த்தைக்கு மறுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வங்கதேசத்தில் அரசுப் பணிகளில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்ட 30 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து அண்மையில் வன்முறைப் போராட்டங்கள் நடைபெற்றன. அதில் 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அதன்பின் இந்த இடஒதுக்கீட்டை 5 சதவீதமாக குறைத்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 18, 2025, 11:15 am
இஸ்ரேலின் கொடூரத் தாக்குதல்: காசாவில் 24 மணி நேரத்தில் 146 பேர் உயிரிழப்பு
May 17, 2025, 11:02 am
இங்கிலாந்தில் ராணுவ தளத்தில் ஏற்பட்ட பயங்கர தீ - 3 பேர் பலி
May 16, 2025, 11:12 am
இந்தோனேசியாவில் ஆடு காணவில்லை: தீயணைப்பு மீட்புப்படையினரின் உதவி கோரப்பட்டது
May 16, 2025, 11:06 am
டிக் டாக் நேரலையின் போது மாடல் அழகி சுட்டுக்கொலை
May 15, 2025, 10:32 am
கனடாவில் காட்டுத் தீ: இருவர் பலி, ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டனர்
May 14, 2025, 12:46 pm
10 ஆண்டுகளுக்குப் பின் சின்னத்தை மாற்றியது கூகுள்
May 14, 2025, 12:10 pm
கனடா நாட்டின் புதிய வெளியுறவு துறை அமைச்சராக அனிதா ஆனந்த் நியமனம்
May 13, 2025, 11:03 am
வங்காளதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி தேர்தலில் போட்டியிட தடை விதிப்பு
May 11, 2025, 11:55 am