செய்திகள் உலகம்
வங்கதேசம் மாணவர்கள் மீண்டும் போராட்ட அறிவிப்பால் பதற்றம்
டாக்கா:
வங்கதேசத்தில் இடஒதுக்கீடுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற மாணவர் குழுத் தலைவர்கள் அரசுடனான பேச்சுவார்த்தையை நிராகரித்து, போராட்டத்துக்கான அழைப்பை விடுத்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை முதல் அரசுக்கு எதிரான போராட்டதை தீவிரப்படுத்தப்படும் என்றும் இதற்காக அரசு இயந்திரம் தங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். இதனால் அங்கு மீண்டும் வன்முறை வெடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் அந்த நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா சனிக்கிழமை இரவு 3 மணி நேரம் அவசர ஆலோசனை நடத்தினார்.
ஷேக் ஹசீனா பதவி விலகுவதை வலியுறுத்தி மாணவர்கள் குழுத் தலைவர்கள் பேச்சுவார்த்தைக்கு மறுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வங்கதேசத்தில் அரசுப் பணிகளில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்ட 30 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து அண்மையில் வன்முறைப் போராட்டங்கள் நடைபெற்றன. அதில் 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அதன்பின் இந்த இடஒதுக்கீட்டை 5 சதவீதமாக குறைத்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 31, 2025, 12:09 pm
பிரிட்டிஷ் மன்னர் சார்ல்ஸ் தனது தம்பியின் இளவரசர் பட்டத்தைப் பறித்து அரண்மனையிலிருந்து வெளியேற்றினார்
October 30, 2025, 11:52 am
6 ஆண்டுகளுக்குப் பிறகு தென்கொரியாவில் டிரம்ப் - சி சின்பிங் சந்திப்பு
October 30, 2025, 7:22 am
தாய்லாந்தின் பிரபல Hong Thai மூலிகை மருந்து பயன்படுத்த வேண்டாம் என்று எச்சரிக்கை
October 29, 2025, 8:52 pm
சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் பயணப் பைகளை மேலும் விரைவாகப் பெறலாம்
October 29, 2025, 7:58 pm
காஸா மீது இஸ்ரேல் நடத்திய காட்டுமிராண்டித்தன தாக்குதலில் 24 குழந்தைகள் உள்பட 90 பேர் உயிரிழப்பு
October 29, 2025, 4:30 pm
சிண்டாவின் ‘புரோஜெக்ட் கிவ்’ திட்டத்திற்கு சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் பேரவை வழங்கிய நன்கொடை
October 29, 2025, 11:12 am
கென்யாவில் சுற்றுலா விமானம் விபத்து: ஜென்மனியர்கள் உட்பட 11 பேர் மரணம்
October 28, 2025, 4:13 pm
4.2 கோடி அமெரிக்கர்கள் உணவு நெருக்கடிக்கு உள்ளாகும் அபாயம்
October 27, 2025, 12:31 pm
