செய்திகள் மலேசியா
கெபிமாவின் 23ஆம் ஆண்டு தேசிய அளவிலான மார்க்கப் போட்டிகள்
கோலாலம்பூர்:
கெபிமாவின் 23ஆம் ஆண்டு தேசிய அளவிலான மார்க்க நிகழ்ச்சிகளின்வழி போட்டிகள் நடத்த மிகவும் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சி வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி காலை 7.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை தலைநகர் ஜாலான் டூத்தா மஸ்ஜித் விலாயாவில் நடைபெறவுள்ளது.
மலேசிய இந்திய முஸ்லிம் இளைஞர் மகளின் இயக்கமான கெபிமாவின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்நிகழ்வு, இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சு, ஜாக்கிம் உட்பட பலரின் ஆதரவுடன் இந்நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
இந்திய முஸ்லிம் மாணவ மாணவிகள் மார்க்கக் கல்வி மேம்பாட்டிற்கும் தங்களிடம் இருக்கும் தனிச் சிறப்புகளை தன்னம்பிக்கை, ஆற்றலைகளையும் வெளிக் கொணர இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்படுகிறது.
நாடு முழுவதிலும் உள்ள மதராஸா மாணவ மாணவிகள் இப் போட்டியில் கலந்துகொள்ள இருக்கின்றார்கள். திருக்குர்ஆன் சரியான உச்சரிப்புடன் ஓதுதல், நஷீத் பாடல்கள், பாங்கு சொல்லுதல், மார்க்க வினாடி வினா என்று பல்வேறு அம்சங்கள் இதில் இடம் பெற்றுள்ளன.
கடந்த 22 ஆண்டு காலமாக நடத்திவரும் கேபிமா அமைப்பு இந்த 23 ஆம் ஆண்டிலும் வெகு சிறப்பாக நடத்த திட்டமிட்டுள்ளதாக அந்த அமைப்பின் தோற்றுநரும் ஆலோசகருமான முஹம்மது பின் காதர் அலி நம்பிக்கையிடம் கூறினார்.
ஆகவே அனைவரும் திரளாக வந்து இந்நிகழ்வுக்கு ஆதரவு தருமாறு கெபிமாவின் நிறுவனரும், ஆலோசகருமான முஹம்மது பின் அப்துல் காதிர் அலி இதனை கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 5, 2026, 3:08 pm
பிரதமரின் 2026 புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் மக்களுக்கான முக்கிய அறிவிப்புகள்
January 5, 2026, 2:19 pm
100 ரிங்கிட் சாரா உதவித் தொகை; பிப்ரவரி 9ஆம் தேதி வழங்கப்படும்: பிரதமர்
January 5, 2026, 12:58 pm
சபா, சராவாக் மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்வு
January 5, 2026, 12:53 pm
பத்துமலை தைப்பூச விழாவை முன்னிட்டு 50 ஆலயங்களுக்கு மானியம் வழங்கப்படும்: பாப்பா ராயுடு
January 5, 2026, 12:01 pm
தைப்பூச விழாவின் போது மதுபான விற்பனைக்கு தடை: பாப்பாராயுடு
January 5, 2026, 11:49 am
ஸ்டீவன் சிம்மின் உதவிக்குப் பிறகு ஹில்மி இப்போது புதிய வாழ்க்கையை தொடங்கியுள்ளார்
January 5, 2026, 11:26 am
மதுரோவை அமெரிக்க விடுவிக்க வேண்டும்: பிரதமர் வலியுறுத்து
January 5, 2026, 10:43 am
