செய்திகள் மலேசியா
கெபிமாவின் 23ஆம் ஆண்டு தேசிய அளவிலான மார்க்கப் போட்டிகள்
கோலாலம்பூர்:
கெபிமாவின் 23ஆம் ஆண்டு தேசிய அளவிலான மார்க்க நிகழ்ச்சிகளின்வழி போட்டிகள் நடத்த மிகவும் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சி வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி காலை 7.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை தலைநகர் ஜாலான் டூத்தா மஸ்ஜித் விலாயாவில் நடைபெறவுள்ளது.
மலேசிய இந்திய முஸ்லிம் இளைஞர் மகளின் இயக்கமான கெபிமாவின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்நிகழ்வு, இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சு, ஜாக்கிம் உட்பட பலரின் ஆதரவுடன் இந்நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
இந்திய முஸ்லிம் மாணவ மாணவிகள் மார்க்கக் கல்வி மேம்பாட்டிற்கும் தங்களிடம் இருக்கும் தனிச் சிறப்புகளை தன்னம்பிக்கை, ஆற்றலைகளையும் வெளிக் கொணர இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்படுகிறது.
நாடு முழுவதிலும் உள்ள மதராஸா மாணவ மாணவிகள் இப் போட்டியில் கலந்துகொள்ள இருக்கின்றார்கள். திருக்குர்ஆன் சரியான உச்சரிப்புடன் ஓதுதல், நஷீத் பாடல்கள், பாங்கு சொல்லுதல், மார்க்க வினாடி வினா என்று பல்வேறு அம்சங்கள் இதில் இடம் பெற்றுள்ளன.
கடந்த 22 ஆண்டு காலமாக நடத்திவரும் கேபிமா அமைப்பு இந்த 23 ஆம் ஆண்டிலும் வெகு சிறப்பாக நடத்த திட்டமிட்டுள்ளதாக அந்த அமைப்பின் தோற்றுநரும் ஆலோசகருமான முஹம்மது பின் காதர் அலி நம்பிக்கையிடம் கூறினார்.
ஆகவே அனைவரும் திரளாக வந்து இந்நிகழ்வுக்கு ஆதரவு தருமாறு கெபிமாவின் நிறுவனரும், ஆலோசகருமான முஹம்மது பின் அப்துல் காதிர் அலி இதனை கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 3, 2026, 11:09 pm
எல்ஆர்டி ரயில் தண்டவாளத்தில் பயணி விழுந்ததால், ரயில் சேவை நிறுத்தப்பட்டது
April 3, 2026, 5:49 pm
எதிர்க்கட்சித் தலைவர் வேட்பாளர் இன்னும் இறுதி செய்யப்படவில்லை: ஹாடி
April 3, 2026, 5:46 pm
எஸ்ஆர்சி வழக்கு: நஜிப் தாக்கல் செய்த மனு மே 7இல் விசாரிக்கப்படும்
April 3, 2026, 3:11 pm
