நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

போலீஸ் சோதனையில் தப்பிச் செல்ல முயன்ற தம்பதியர் கைது

ஜொகூர் பாரு: 

ஸ்கூடாய் தாமான் இம்பியான் எமாஸ் என்ற பகுதியில் போலீசிடமிருந்து தப்பி ஓட முயன்ற தம்பதியர் கைது செய்யப்பட்டனர்.

ஜூலை 24ஆம் நாள் அன்று, இரவு 11.20 மணியளவில் அப்பகுதியில் வழக்கமான குற்றத்தடுப்பு ரோந்துப் பணி போலீஸ்காரர்கள் இருந்தபோது அந்த தம்பதியர் சந்தேகத்திற்கிடமான காரைச் செலுத்திச் சென்றதாக வடக்கு ஜொகூர் பாரு உதவி ஆணையர் பல்வீர் சிங் தெரிவித்தார்.

அந்தக் காரை 27 வயதான இளைஞர் ஓட்டினார்.

அருகில் அவனது காதலியும் இருந்தாள். கையில் குழந்தை இருந்தது என்றார் அவர். 

போலீஸ் சோதனை தடுப்பிலிருந்து அந்த இளைஞர் தப்பிச் செல்ல முயன்றான்.

இறுதியில் தாமான் இம்பியான் எமாஸில் அவன் பிடிப்பாட்டான் எஅ பல்வீர் சிங் குறிப்பிட்டார். இந்த சம்பவம் சார்ந்த விடியோ X  தளத்தில் வெளியிடப்பட்டது.

அவர்கள் இருவரும் போதைபொருளை பயன்படுத்தியது விசாரணையில் தெரியவந்தது. அதனால்தான் தப்பிச் செல்ல முயற்சித்துள்ளனர் என்பதையும் அவர் தெளிவுப்படுத்தினார்.

சம்பந்தப்பட்ட நபரைப் பிடிப்பதற்காக 6 கார்கள் பயன்படுத்தப்பட்டன. இது கடத்தல் சார்ந்த குற்றமல்ல.

இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதையும் அவர் விளக்கினார்.

அரசு ஊழியர் பணிக்கு இடையூறு விளைவித்ததற்காக குற்றவியல் சட்டம் 186வது பிரிவின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது.

- தயாளன் சண்முகம்

தொடர்புடைய செய்திகள்

+ - reset