நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மாரான் சே மினா சாயாங் பொழுதுபோக்கு பூங்காவிற்கு சென்ற 16 பேர் ரோட்டா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்

குவாந்தான்:

மாரான் சே மினா சாயாங் பொழுதுபோக்கு பூங்காவிற்கு சென்ற 16 பேர் ரோட்டா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாரான் சுகாதார இலாகா இதனை உறுதிப்படுத்தியது.

இந்த பூங்காவிற்கு சென்ற 16 பேர் வயிற்று வலி, வாந்தி, வயிற்றுப் போக்கு, காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர்.

இரண்டு வயது முதல் 11 வயதுக்கு இடைப்பட்டவர்கள் அதிகமானோர் இதில் பாதிக்கப்பட்டனர்.

இவர்கள் ரோட்டா தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பந்தப்பட்ட அனைத்து பிள்ளைகளும் நிலையாக உள்ளனர்.

அவர்கள் மாரான், ஜெங்கா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் ஒரு குழந்தையின் தாயான 27 வயது பெண் வெளிநோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset