நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உலு திராம் தாக்குதலில் கொல்லப்பட்ட காவலர் பற்றி  அவதூறு பரப்பிய சந்தேக நபர் கைது

ஈப்போ:

ஜொகூர் உலு திராம் போலிஸ் நிலையத்தில் இவ்வாண்டு மே மாதம் நடத்தப்பட்ட தாக்குதலில், போலிசார்  இருவர் உயிரிழந்தனர்.

இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்ட காவலர் குறித்து பேஸ்புக்கில் அவதூறு பரப்பியதாகச் சந்தேகிக்கப்படும் 25 வயது உள்ளூர் ஆடவர் ஒருவரை போலிசார் செப்டம்பர் 5ஆம் தேதி கைது செய்தனர்.

உலு திராம் சம்பவத்தில் கொல்லப்பட்ட போலிசாரான அஹ்மத் அஸ்ஸா ஃபஹ்மி அஸ்ஹரின் குடும்பத்தினர் ஆகஸ்ட் 29ஆம் தேதி அளித்த புகாரைத் தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

மேலும், தொழிற்சாலையில் பணிபுரிந்த சந்தேக நபரின் கைப்பேசியைக் போலிசார் பறிமுதல் செய்தனர்.

தாப்பா மாவட்ட காவல்துறைத் தலைவர் முஹம்மது நைம் அஸ்னாவி  இதனை கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset