நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜொகூர் மக்கோத்தா சட்டமன்ற இடைத் தேர்தலில் தேசிய முன்னணி சார்பில் சைட் ஹுசைன் களமிறங்குவார்: மந்திரி புசார் அறிவிப்பு 

குளுவாங் -

ஜொகூர் மக்கோத்தா சட்டமன்ற இடைத் தேர்தலில் தேசிய முன்னணி சார்பில் குளுவாங் அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் சைட் ஹுசைன் களமிறங்குவார்.

ஜொகூர் மந்திரி புசார் டத்தோ ஓன் ஹபிஸ் காஸி இதனை கூறினார்.

மக்கோத்தா சட்டமன்ற இடைத் தேர்தல் வரும் செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்த தேர்தலில் தேசிய முன்னணி களமிறங்குவதால் அதற்கான வேட்பாளர், தேர்தல் கேந்திர அறிமுக விழா இன்று நடைபெற்றது.

இவ்விழாவில் பேசிய மந்திரி புசார், மக்கோத்தா சட்டமன்ற இடைத் தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆகையால் அதற்கான வேட்பாளர் தேர்வில் அதிக கால அவகாசம் எடுத்துக் கொள்ளப்பட்டது.

இத் தேர்தலில் போட்டியிட பலரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டது. அந்த வேட்பாளர்களின் பெயர்கள் முழுமையாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.

இறுதியில் குளுவாங் அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் சைட் ஹுசைன் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார்.

இளைஞரான சைட் உசைன் வெற்றியை உறுதி செய்ய அனைவரும் ஒன்றுப்பட்டு உழைக்க வேண்டும்.

குறிப்பாக யாரும் கீழறுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்று அவர் கேட்டுக் கொண்டார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset