நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உணர்வு அரசியலைச் சமாளித்து, சேவையை முன்னெடுங்கள்: டத்தோஶ்ரீ ஜாஹித்

ஜொகூர்பாரு: 

மலாய் சமூகத்தின் ஆதரவை அம்னோ மீண்டும் பெற சேவை அரசியலை முன்னெடுக்க வேண்டும்.

 அதேவேளையில் உணர்வு அடிப்படையிலான விவகாரங்கள், வெறுப்பு அரசியலை முறையாக கையாள வேண்டுமென அதன் தலைவர் டத்தோஶ்ரீ அஹமத் ஜாஹிட் ஹமிடி வலியுறுத்தியுள்ளார்.

மலாய் சமூகத்தின் போராட்டத்தை மையமாகக் கொண்ட இக்கட்சி மீண்டும் எழுச்சிப் பெற இந்த நடைமுறை அவசியமென அவர் மேலும் கூறினார்.

தேர்தல்  களத்தில் மட்டும் தோன்றும் கட்சி அம்னோ இல்லை. எப்போதும் அது மக்களுடன் இணைந்திருக்கும் என்றார் அவர்.

தற்போதைய சூழ்நிலையில் அம்னோ, தேசிய முன்னணி உறுப்பு கட்சிகள் உணர்வு அடிப்படையிலான வெறுப்பு அரசியலைச் சமாளிக்க வேண்டும்.

அதே தருணத்தில் கட்சியின் வளர்ச்சி, மக்கள் சேவையில் அதிகம் கவனம் கொள்ள வேண்டும் என்றும் ஜாஹித் கூறினார்.

மத, இன உணர்வுகளுடன் விளையாடி மற்ற கட்சிகள் வெற்றி பெறுகின்றன.

ஆனால் அம்னோ நல்லவர்களின் கட்சி.

நாம் வெற்றிபெற  விரும்பினால் வெற்றியாளர்களைப் போல செயல்பட வேண்டும் என ஜோகூரில் நடந்த அம்னோ கூட்டத்தில் பேசினார்.

- தயாளன் சண்முகம்

தொடர்புடைய செய்திகள்

+ - reset