நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

என்னையும் பிரதமரையும் சந்திக்க எதிர்க்கட்சித் தலைவர்கள் தயாராக உள்ளனர்: ஜாஹித்

ஜொகூர்பாரு:

வரும் பொதுத் தேர்தலி குறித்து பேச்சுவார்த்தை நடத்த என்னையும் பிரதமரையும் சந்திக்க எதிர்க்கட்சி தலைவர்கள் தயாராக உள்ளனர்.

அம்னோ தலைவரும் துணைப் பிரதமருமான டத்தோஶ்ரீ  ஜாஹித் ஹமிடி இதனை தெரிவித்தார்.

வரவிருக்கும் பொதுத் தேர்தலில் பேச்சுவார்த்தை நடத்தவும் ஒத்துழைப்பை உருவாக்கவும் எங்களை சந்திக்க விரும்பும் எதிர்க்கட்சி அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் தயாராக உள்ளனர்.

ஆனால் தற்போது கேள்விக்குரிய கட்சியின் பிரதிநிதிகளைச் சந்திக்க நாங்கள் தயாராக இல்லை.

என்னையும் அன்வாரையும் பார்க்க ஒரு தூதுக்குழு வந்துள்ளது. இனி அவர்களை சந்திக்க நான் தயாராக இல்லை.

மேலும் இரண்டாவது முறையாக அதே பாம்பு கடிக்க வேண்டாம் என்று நான் சொன்னேன்.

ஜொகூரில் அம்னோ தலைவர்களுடான கூட்டத்தில் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset