நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

இந்தியா கூட்டணியினர் நாடாளுமன்றத்தில் ஆர்ப்பாட்டம்

புது டெல்லி:

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் பட்ஜெட்டில் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக கூறி இந்தியா கூட்டணி எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேபோல், காங்கிரஸ் ஆட்சியில் உள்ள கர்நாடகம், தெலங்கானா, ஹிமாசல பிரதேச முதல்வர்கள் நீதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணிக்க உள்ளனர்.

முன்னதாக, திமுக இந்தக் கூட்டத்தை புறக்கணிப்பதாக அதன் தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

மத்திய பட்ஜெட்டை கண்டித்து "இந்தியா' கூட்டணி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, திமுக உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமான எதிர்க்கட்சி எம்பிக்கள் கலந்து கொண்டனர்.

மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட் மிகுந்த பாகுபாடு கொண்டதாகவும், ஆபத்தானதாகவும் உள்ளது என்றும் இது கூட்டாட்சித் தத்துவம், மத்திய அரசு கடைப்பிடிக்க வேண்டிய நேர்மை ஆகியவற்றுக்கு முற்றிலும் எதிராக உள்ளது என்றும் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர் கே.சி.வேணுகோபால் தெரிவித்தார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset