நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: நாக்பூரில் அவசரத் தரையிறக்கம்

நாக்பூர்: 

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரிலிருந்து தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் சென்ற இண்டிகோ விமானம் வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து நாக்பூருக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை திருப்பி விடப்பட்டது.

ஜபல்பூரிலிருந்து ஹைதராபாத் செல்லவிருந்த அதன் 6E-7308 விமானம் ஞாயிற்றுக்கிழமை காலை விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல் செய்தியால் நாக்பூர் சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது என்று இண்டிகோ ஓர் அறிக்கையில் தெரிவித்தது. 

விமானம் தரையிறங்கியதும் அனைத்துப் பயணிகளும் இறக்கிவிடப்பட்டனர்.

மேலும், கட்டாய பாதுகாப்பு சோதனைகள் உடனடியாக தொடங்கப்பட்டன. 

பயணிகளுக்கு உதவி மற்றும் சிற்றுண்டிகள் வழங்கப்பட்டன என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானத்தின் குளியலறையில் கண்டெடுக்கப்பட்ட காகிதத்தில் வெடிகுண்டு மிரட்டல் செய்தி எழுதப்பட்டதாக போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

இருப்பினும், பாதுகாப்பு ஏஜென்சிகளின் முழுமையான சோதனைக்குப் பிறகு சந்தேகத்திற்குரிய எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று அந்த அதிகாரி மேலும் கூறினார்.

மதியம் 2 மணிக்கு விமானம் மீண்டும் தனது பயணத்தைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக விமான நிலைய அதிகாரி தெரிவித்தார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset