செய்திகள் இந்தியா
வக்பு சட்டத் திருத்தகூட்டத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் கடுமையான கேள்விகள் எழுப்பினர்: பதிலளிக்க முடியாமல் திணறிய அதிகாரிகள்
புது டெல்லி:
வக்பு சட்டத்திருத்த மசோதா தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக் குழு கூட்டத்தில் ஒன்றிய அரசு அதிகாரிகளிடம் எதிக்ர்கட்சி எம்.பி.க்கள் கடுமையான கேள்விகளை முன்வைத்தனர்.
மாநிலங்கள் முழுவதும் செயல்படும் வக்பு வாரியங்களின் நிலங்களின் உரிமையை மாவட்ட ஆட்சியர் முடிவு செய்வார் என்று ஒன்றிய அரசு ஏராளமான சட்டத் திருத்தங்களை கொண்டு வந்துள்ளது.
இந்த மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆராய்ந்து வருகிறது. அந்தக் குழுவின் மூன்றாவது கூட்டத்தில் ஒன்றிய நகர்ப்புற விவகாரங்கள், சாலைப் போக்குவரத்து, ரயில்வே அமைச்சகங்களின் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது தில்லியை சுற்றியுள்ள இந்த அமைச்சகங்களின் விரிவாக்க திட்டங்களுக்கு தேவையான இடங்களில் உள்ள வக்பு சொத்துகள் குறித்து அவர்கள் விளக்கமளித்தனர்.
அரசு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, வளர்ச்சித் திட்டங்களை துரிதப்படுத்த வக்பு சட்டத்திருத்த மசோதா வழிவகுக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சி எம்பிக்கள், ஒரு சொத்து வக்ஃப் சொத்து என்று தவறாக அறிவிக்கப்பட்டால், அதை எதிர்த்து வழக்கு தொடுக்க ஏற்கெனவே சட்டத்தில் இடம் உள்ளது என வாதிட்டனர்.
மேலும், சுயசிந்தனையில்லாமல் ஒன்றிய அமைச்சகங்கள் ஒன்றிய அரசின் வக்பு சட்டத் திருத்தத்தை அங்கீகரிப்பதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குறிப்பிட்டனர்.
இதனால் ஆளும் பாஜக எம்.பி.க்களுக்கும் எதிர்க்கட்சியான திரிணமூல், ஆம் ஆத்மி எம்.பி.க்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
கடந்த 1911ம் ஆண்டு தில்லியை கட்டமைக்க ஆங்கிலேய அரசு எவ்வாறு நிலம் கையகப்படுத்தும் பணியை மேற்கொண்டது என்பது குறித்து ஒன்றிய நகர்ப்புற விவகாரங்கள் துறை அதிகாரிகள் கூட்டத்தில் எடுத்துரைத்தனர்.
அப்போது கூட்டுக் குழு உறுப்பினர்களான எம்.பி.க்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அதிகாரிகள் பதிலளிக்க முடியாமல் திணறினார்கள் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 16, 2026, 8:43 pm
டெல்லி விமான நிலையத்தில் இரு விமானங்கள் மோதல்
April 16, 2026, 5:05 pm
கோவையில் துயரம்: 3-ஆம் ஆண்டு பொறியியல் மாணவர் மாடியிலிருந்து குதித்து தற்கொலை
April 16, 2026, 4:42 pm
ஆக்ராவில் அரங்கேறிய கொடூர நாடகம்: தான் இறந்ததாகக் காட்ட பிச்சைக்காரரைக் கொன்ற முன்னாள் காவலர்
April 16, 2026, 4:23 pm
மும்பையில் பரபரப்பு: திருமண ஆசை காட்டி புது மாப்பிள்ளைகளை ஏமாற்றிய ‘மாயக் கன்னி’
April 14, 2026, 5:40 pm
மழைக்கால வெள்ளத்திற்கு முற்றுப்புள்ளி: நவீன 'பிரிகாஸ்ட்' தொழில்நுட்பத்தில் புதிய வடிகால் அமைப்பு
April 13, 2026, 2:52 pm
நொய்டாவில் போர்க்களம்: ஊதிய உயர்வுக்காக வன்முறையில் ஈடுப்பட்ட தொழிலாளர்கள்
April 13, 2026, 10:17 am
மத்திய பிரதேசத்தில் பரபரப்பு: பீகாரில் இருந்து மகாராஷ்டிராவிற்கு கடத்தப்பட்ட 163 சிறுவர்கள் மீட்பு
April 12, 2026, 5:13 pm
