செய்திகள் இந்தியா
வக்பு சட்டத் திருத்தகூட்டத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் கடுமையான கேள்விகள் எழுப்பினர்: பதிலளிக்க முடியாமல் திணறிய அதிகாரிகள்
புது டெல்லி:
வக்பு சட்டத்திருத்த மசோதா தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக் குழு கூட்டத்தில் ஒன்றிய அரசு அதிகாரிகளிடம் எதிக்ர்கட்சி எம்.பி.க்கள் கடுமையான கேள்விகளை முன்வைத்தனர்.
மாநிலங்கள் முழுவதும் செயல்படும் வக்பு வாரியங்களின் நிலங்களின் உரிமையை மாவட்ட ஆட்சியர் முடிவு செய்வார் என்று ஒன்றிய அரசு ஏராளமான சட்டத் திருத்தங்களை கொண்டு வந்துள்ளது.
இந்த மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆராய்ந்து வருகிறது. அந்தக் குழுவின் மூன்றாவது கூட்டத்தில் ஒன்றிய நகர்ப்புற விவகாரங்கள், சாலைப் போக்குவரத்து, ரயில்வே அமைச்சகங்களின் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது தில்லியை சுற்றியுள்ள இந்த அமைச்சகங்களின் விரிவாக்க திட்டங்களுக்கு தேவையான இடங்களில் உள்ள வக்பு சொத்துகள் குறித்து அவர்கள் விளக்கமளித்தனர்.
அரசு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, வளர்ச்சித் திட்டங்களை துரிதப்படுத்த வக்பு சட்டத்திருத்த மசோதா வழிவகுக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சி எம்பிக்கள், ஒரு சொத்து வக்ஃப் சொத்து என்று தவறாக அறிவிக்கப்பட்டால், அதை எதிர்த்து வழக்கு தொடுக்க ஏற்கெனவே சட்டத்தில் இடம் உள்ளது என வாதிட்டனர்.
மேலும், சுயசிந்தனையில்லாமல் ஒன்றிய அமைச்சகங்கள் ஒன்றிய அரசின் வக்பு சட்டத் திருத்தத்தை அங்கீகரிப்பதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குறிப்பிட்டனர்.
இதனால் ஆளும் பாஜக எம்.பி.க்களுக்கும் எதிர்க்கட்சியான திரிணமூல், ஆம் ஆத்மி எம்.பி.க்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
கடந்த 1911ம் ஆண்டு தில்லியை கட்டமைக்க ஆங்கிலேய அரசு எவ்வாறு நிலம் கையகப்படுத்தும் பணியை மேற்கொண்டது என்பது குறித்து ஒன்றிய நகர்ப்புற விவகாரங்கள் துறை அதிகாரிகள் கூட்டத்தில் எடுத்துரைத்தனர்.
அப்போது கூட்டுக் குழு உறுப்பினர்களான எம்.பி.க்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அதிகாரிகள் பதிலளிக்க முடியாமல் திணறினார்கள் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 15, 2024, 5:52 pm
2 நாளில் பதவி விலகுகிறேன்: டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அதிரடி அறிவிப்பு
September 15, 2024, 2:07 pm
6 மாதங்களுக்கு பிறகு ஜாமீனில் விடுதலையானார் தில்லி முதல்வர்: சிபிஐக்கு கண்டனம்
September 13, 2024, 9:11 pm
இந்தியா - சீனா இடையே விரைவில் நேரடி விமான சேவை
September 13, 2024, 12:56 pm
யெச்சூரியைப்போல் எந்ததெந்தத் தலைவர்கள் மருத்துவ ஆய்வுக்காக உடல் தானம் செய்துள்ளனர் தெரியுமா?
September 13, 2024, 12:40 pm
ஆதார் அட்டையை புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
September 12, 2024, 5:10 pm
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் வீட்டு பூஜையில் பிரதமர் மோடி: வலுக்கும் கண்டனங்கள்
September 12, 2024, 11:43 am
மதுபான பாட்டில்களை சாலையில் கொட்டிய போலிசார்: அள்ளிச்சென்ற குடிமகன்கள்
September 12, 2024, 9:42 am
ஆட்டின் மீது RAM; பறிமுதல் செய்த போலிஸ்: திருப்பித் தரச் சொன்ன நீதிமன்றம்
September 10, 2024, 11:00 am
நிலவில் ஏற்பட்ட 250-க்கும் மேற்பட்ட அதிர்வுகளைச் சந்திரயான் 3 பதிவு
September 9, 2024, 8:29 pm