நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

பசுவை கடத்தியதாக பள்ளி மாணவன் சுட்டுக் கொலை

புதுடெல்லி: 

ஹரியானாவில் பசுவைக் கடத்திச் செல்வதாக நினைத்து பள்ளி மாணவனை ஒரு பழமைவாத ஹிந்துத்துவா கும்பல் விரட்டிச் சென்று சுட்டு கொன்றுள்ளனர்.

மாட்டு இறைச்சி சாப்பிட்டதாக சில தினங்களுக்கு முன்பு புலம்பெயர் தொழிலாளி அடித்துக் கொல்லப்பட்ட நிலையில் இந்த சம்பவம் ஹரியானாவில் அரங்கேறியது.

இந்நிலையில், ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தை சேர்ந்தவர் ஆரியன் மிஸ்ரா (வயது 19) என்ற 12ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர். கடந்த 23ஆம் தேதி தனது நண்பர்களான ஹர்சித், சங்கியுடன் சாப்பிடுவதற்காக காரில் உணவகம் சென்றுள்ளார்.

அப்போது, பசுவைக் கடத்துவதாக ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில் பசுப்பாதுகாவலர் எனும் போர்வையில், ஹிந்துத்துவா கும்பலை சேர்ந்த சிலர் ஆரியனின் காரை நிறுத்துமாறு தெரிவித்துள்ளனர்.

ஆனால், கார் நிற்காமல் சென்ற NE நிலையில், சுமார் 25 கிலோ மீட்டர் நண்பர்களுடன் சென்ற ஆரியனின் காரை அந்த கொலைகார கும்பல் துரத்திச் சென்று பல்வால் என்ற இடத்தில் ஆரியனை சுட்டுக் கொன்றனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, அந்த ஹிந்துத்துவா கும்பலைச் சேர்ந்த   அனில் கௌசிக், வருண், கிருஷ்ணா, ஆதேஷ், சௌரவ் ஆகியோரை கைது செய்து, துப்பாக்கியையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset