செய்திகள் இந்தியா
மாநில அந்தஸ்தை மீட்போம்: ஜம்மு காஷ்மீரில் ராகுல் வாக்குறுதி
ஜம்மு:
ஜம்மு காஷ்மீரின் மாநில அந்தஸ்தை மீட்போம் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் வாக்குறுதி அளித்தார்.
ஜம்மு காஷ்மீர் பேரவைத் தேர்தல் பிரசாரத்தை புதன்கிழமை அவர் தொடங்கினார்.
அங்கு செப்டம்பர் 18, 25, அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக பேரவைத் தேர்தல் 10 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறவுள்ளது. இதில் தேசிய மாநாட்டுக் கட்சியுடன் இணைந்து தேர்தலைச் சந்திக்கிறது காங்கிரஸ்.
தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ராகுல் பேசுகையில், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களின் பெருநிறுவன முதலாளி நண்பர்களான அதானி மற்றும் அம்பானி ஆகிய 4 பேர்தான் ஆட்சியை வழிநடத்துகின்றனர்.
சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக ஜம்மு காஷ்மீரின் மாநில அந்தஸ்தை மீட்டெடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் விரும்பியது. ஆனால், அதில் விருப்பமில்லாத பாஜக, முதலில் தேர்தலை நடத்தி முடிக்க எண்ணியது.
பாஜக விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பிராந்தியத்தின் மாநில அந்தஸ்து திரும்பக் கிடைப்பதை இந்தியா கூட்டணி உறுதி செய்யும் என்றார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
June 21, 2026, 9:23 am
சார் தாம் யாத்திரையில் உயிரிழப்பு 198 ஆக உயர்ந்தது
June 16, 2026, 3:22 pm
இந்தியத் தலைநகரில் கடுமையான புழுதிப்புயல்: சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டது
June 16, 2026, 2:49 pm
ஏர்-இந்தியா விமானத்தில் இயந்திர கோளாறு: 180 பயணிகள் பத்திரமாக மீட்பு
June 14, 2026, 12:22 pm
அயோத்தியில் ராமர் கோயில் காணிக்கை பணம் திருட்டு: சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் குற்றச்சாட்டு
June 14, 2026, 9:27 am
இந்தியாவில் டைப்-2 வகை சர்க்கரை நோயால் பெண்கள் பாதிக்கப்படுவது 47% அதிகரிப்பு
June 13, 2026, 7:41 pm
