செய்திகள் இந்தியா
மாநில அந்தஸ்தை மீட்போம்: ஜம்மு காஷ்மீரில் ராகுல் வாக்குறுதி
ஜம்மு:
ஜம்மு காஷ்மீரின் மாநில அந்தஸ்தை மீட்போம் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் வாக்குறுதி அளித்தார்.
ஜம்மு காஷ்மீர் பேரவைத் தேர்தல் பிரசாரத்தை புதன்கிழமை அவர் தொடங்கினார்.
அங்கு செப்டம்பர் 18, 25, அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக பேரவைத் தேர்தல் 10 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறவுள்ளது. இதில் தேசிய மாநாட்டுக் கட்சியுடன் இணைந்து தேர்தலைச் சந்திக்கிறது காங்கிரஸ்.
தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ராகுல் பேசுகையில், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களின் பெருநிறுவன முதலாளி நண்பர்களான அதானி மற்றும் அம்பானி ஆகிய 4 பேர்தான் ஆட்சியை வழிநடத்துகின்றனர்.
சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக ஜம்மு காஷ்மீரின் மாநில அந்தஸ்தை மீட்டெடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் விரும்பியது. ஆனால், அதில் விருப்பமில்லாத பாஜக, முதலில் தேர்தலை நடத்தி முடிக்க எண்ணியது.
பாஜக விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பிராந்தியத்தின் மாநில அந்தஸ்து திரும்பக் கிடைப்பதை இந்தியா கூட்டணி உறுதி செய்யும் என்றார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
March 24, 2026, 5:16 pm
காசநோய் குழந்தைகளுக்கு 47,000 ரூபாய் திரட்டிய பணியாளர்கள்
March 24, 2026, 4:22 pm
"எக்ஸ்ட்ரா காசு தர்றோம்.. பார்சல் பண்ணுங்க": முதியவரை மூட்டையில் கட்டி கொண்டு வந்த 5 பேர்
March 24, 2026, 4:16 pm
ஈகைத் திருநாள் தொழுகைக்குத் தடை விதித்த அதிகாரி: இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக நின்ற இந்து மக்கள்
March 24, 2026, 2:43 pm
வெற்று மிரட்டலா அல்லது சதியா?: டெல்லி பள்ளிகள், சட்டசபைக்குத் தொடரும் மர்ம மின்னஞ்சல்கள்
March 23, 2026, 5:16 pm
ஆட்டோ ஓட்டி வாழ்வாதாரத்தை வெல்லும் வீர மங்கையர்கள்
March 20, 2026, 8:29 pm
வரலாறு காணாத ரூபாய் வீழ்ச்சி
March 20, 2026, 10:12 am
மேற்காசிய போர் சூழல் குறித்து மலேசிய பிரதமருடன் மோடி உரையாடல்
March 19, 2026, 10:18 pm
