
செய்திகள் இந்தியா
மாநில அந்தஸ்தை மீட்போம்: ஜம்மு காஷ்மீரில் ராகுல் வாக்குறுதி
ஜம்மு:
ஜம்மு காஷ்மீரின் மாநில அந்தஸ்தை மீட்போம் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் வாக்குறுதி அளித்தார்.
ஜம்மு காஷ்மீர் பேரவைத் தேர்தல் பிரசாரத்தை புதன்கிழமை அவர் தொடங்கினார்.
அங்கு செப்டம்பர் 18, 25, அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக பேரவைத் தேர்தல் 10 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறவுள்ளது. இதில் தேசிய மாநாட்டுக் கட்சியுடன் இணைந்து தேர்தலைச் சந்திக்கிறது காங்கிரஸ்.
தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ராகுல் பேசுகையில், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களின் பெருநிறுவன முதலாளி நண்பர்களான அதானி மற்றும் அம்பானி ஆகிய 4 பேர்தான் ஆட்சியை வழிநடத்துகின்றனர்.
சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக ஜம்மு காஷ்மீரின் மாநில அந்தஸ்தை மீட்டெடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் விரும்பியது. ஆனால், அதில் விருப்பமில்லாத பாஜக, முதலில் தேர்தலை நடத்தி முடிக்க எண்ணியது.
பாஜக விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பிராந்தியத்தின் மாநில அந்தஸ்து திரும்பக் கிடைப்பதை இந்தியா கூட்டணி உறுதி செய்யும் என்றார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 14, 2025, 10:10 pm
மோடி பயணம் மணிப்பூருக்கு பெரும் அவமதிப்பு
September 14, 2025, 10:02 pm
பாலியல் குற்றச்சாட்டை பயோ டேட்டாவில் சேர்க்க உத்தரவிட்ட நீதிமன்றம்
September 14, 2025, 8:39 pm
வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளிக்கிறது
September 14, 2025, 8:05 pm
upi பரிவர்த்தனை ரூ.10 லட்சமாக உயர்வு; என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன?: ஒரு பார்வை
September 12, 2025, 8:56 pm
முஸ்லிம்களின் தலையை எடுப்போம்; வன்முறை தூண்டும் பேச்சு: பாஜக தலைவர் ரவி மீது வழக்கு
September 12, 2025, 8:42 pm
சிறுபான்மையினர் நிலை: ஐ.நா. வில் இந்தியாவுக்கு ஸ்விட்சர்லாந்து கேள்வி
September 10, 2025, 5:46 pm
நேபாளம் செல்லும் இந்தியர்களுக்கு எச்சரிக்கை
September 10, 2025, 3:17 pm
எலுமிச்சை பழத்தில் ஏற்றியபோது, ஷோரூம் முதல் மாடியிலிருந்து குப்புற விழுந்த புதிய கார்
September 9, 2025, 11:21 pm
தண்டனை காலத்துக்கு அதிகமாக சிறையில் அடைப்பு: ரூ.25 லட்சம் இழப்பீடு
September 9, 2025, 10:35 pm