நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

டிரம்ப் கொலை முயற்சியைத் தொடர்ந்து பைடனுக்கு மிரட்டல்

வாஷிங்டன்:

அமெரிக்க முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப் மீதான படுகொலை முயற்சி தோல்வியில் முடிந்த சில நாள்களில் அதிபர் ஜோ பைடனுக்கு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன.

மிரட்டல்களை விடுத்த ஜேசன் பேட்ரிக் ஆல்டே எனும் ஆடவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
 
புளோரிடாவைச் சேர்ந்த அவருக்கு வயது 39.

அதிபர் பைடனையும் மற்ற அரசாங்க அதிகாரிகளையும் ஆல்டே மிரட்டினார்.

மனநலக் காப்பகத்தில் அவர் அனுமதிக்கப்படும்போது அவ்வாறு மிரட்டியதாகப் புகாரளிக்கப்பட்டது.

மேலும் அவர் எக்ஸ் தளத்தில் அத்தகைய மிரட்டல்களைப் பதிவிட்டார்.

விசாரணைக்கு முன்னர் ஆல்டேயை தடுப்புக் காவலில் வைக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset