செய்திகள் உலகம்
சிங்கப்பூரில் தனியாக வாழும் மூத்தோரின் எண்ணிக்கை 10 ஆண்டுகளில் இரட்டிப்பானது
சிங்கப்பூர்:
சிங்கப்பூரில் தனியாக வாழும் மூத்தோரின் எண்ணிக்கை 10 ஆண்டுகளில் இரட்டிப்பானதாகச் சுகாதார அமைச்சர் ஓங் யீ கங் (Ong Ye Kung) தெரிவித்துள்ளார்.
மூத்தோர் தனியாக வாழும் வீடுகளின் எண்ணிக்கை,.
2014 ஆம் ஆண்டு 42,100 ஆக இருந்தது.
2024ஆம் ஆண்டு 87,200 ஆக அதிகரித்துள்ளது.
தனியாக வாழாத மூத்தோருடன் ஒப்பிடுகையில் தனியாக வாழும் 60 வயதுக்கு மேற்பட்ட பெரியோர் மனச்சோர்வு அடையும் சாத்தியம் இருமடங்கு அதிகம் என்று மூப்படைதல் ஆய்வு, கல்விக்கான Duke NUS நிலையம் வெளியிட்ட ஆய்வு காட்டுகிறது.
அத்தகையோரைத் துடிப்புமிக்க மூப்படையும் திட்டத்தில் சேர்த்துவிடுவதற்கு முயற்சி எடுக்கப்படுவதாகத் அமைச்சர் ஓங் நாடாளுமன்றத்தில் கூறினார். மூத்தோர் தலைமுறை அலுவலகம் அவர்களை அடையாளம் காண்பதாக அவர் மேலும் கூறினார். மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுவோருக்குச் சமூக மனநலக் குழுக்களின் ஆதரவும் வழங்கப்படுவதாக ஓங் குறிப்பிட்டார்.
- ரோஷித் அலி
தொடர்புடைய செய்திகள்
February 17, 2026, 5:34 pm
அளவுக்கு மீறிய பயணிகள் ஏற்றம்: பேருந்து அனுமதி இரண்டு மாதங்களுக்கு இடைநிறுத்தம்
February 16, 2026, 6:41 pm
பாகிஸ்தானிலிருந்து விலகிய ஆப்கானிஸ்தான்: மருந்துத் துறைக்கு புதிய அறைகூவல்
February 15, 2026, 11:47 am
தென்கிழக்கு பிரான்சில் பனிச்சரிவில் சிக்கி மூன்று சறுக்கு வீரர்கள் உயிரிழந்தனர்
February 14, 2026, 7:05 pm
பிரான்சில் குழந்தையின் சடலங்களை குளிர்சாதனப் பெட்டியில் மறைத்து வைத்த தாய் கைது
February 14, 2026, 4:41 pm
2 சிசுக்களைக் குளிர் சாதனப் பெட்டியில் வைத்து கொன்ற தாய்
February 14, 2026, 12:42 pm
ஷாங்காயில் மாபெரும் சாலை பிளப்பு: பீதியில் மக்கள்
February 14, 2026, 12:38 pm
பாரிஸில் பதற்றம்: கத்தி ஏந்திய நபர் போலிசார் சுட்டுக் கொலை
February 14, 2026, 10:23 am
