செய்திகள் உலகம்
ஆஸ்திரேலியாவில் அதீத வெப்பத்தால் காட்டுத்தீ பரவல் தொடர்கிறது: பொதுமக்களுக்கு எச்சரிக்கை
சிட்னி:
ஆஸ்திரேலியா தீயணைப்பு வீரர்கள், அதிக வெப்ப நிலையினாலும், காற்றின் காரணமாகவும், காட்டுத்தீ அபாயம் அதிகரிக்கும் என பொது மக்களுக்கு எச்சரிக்கை வழங்கினர். கடந்த வாரங்களில் ஏற்பட்ட காட்டுத்தீ ஒன்று ஒருவரின் உயிரை பறித்து, 350-க்கும் மேற்பட்ட கட்டிடங்களை நாசம் செய்துள்ளது.
விக்டோரியாவில் காற்றும் வெப்பமும் 40° செல்சியஸ்ஸுக்கு மேல் சென்றதால் பல இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இதுவரை 12 முக்கிய இடங்களில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது.
நாட்டின் தீயணைப்பு ஆணையத்தின் தலைவர் ஜேசன் ஹெஃபர்னன், “இந்த உச்ச வெப்ப பருவம் இன்னும் தொடக்க நிலையில்தான் உள்ளது. ஜனவரி இறுதிக்குள் மேலும் ஒரு வெப்ப அலை எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான தயாரிப்புகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.” என்று சுட்டிக்காட்டி உள்ளார்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், காட்டுத்தீ அபாயங்கள் மீண்டும் எங்கும் எழலாம் என்பதால் பொது மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.
தீயணைப்பு அவசர மேலாண்மை அதிகாரிகள், தற்போதைய சூழல் சிறிது மேம்பட்டிருந்தாலும், காற்றின் வேகம் காரணமாக தீ விரைவாக பரவக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- கிரித்திகா
தொடர்புடைய செய்திகள்
January 13, 2026, 2:54 pm
நானே வெனிசுலாவின் தற்காலிக அதிபர்: ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
January 13, 2026, 2:43 pm
சிங்கப்பூரில் தனியாக வாழும் மூத்தோரின் எண்ணிக்கை 10 ஆண்டுகளில் இரட்டிப்பானது
January 11, 2026, 8:50 pm
மலேசிய எல்லை அருகே தாய்லாந்தில் 11 பெட்ரோல் நிலையங்களில் தாக்குதல்
January 9, 2026, 6:34 pm
சிங்கப்பூரில் Nestle NAN பால் மாவுக்குத் தடை
January 9, 2026, 6:28 pm
இரண்டு நாள்களில் அமெரிக்கக் குடிநுழைவு அதிகாரிகள் நடத்திய 2 துப்பாக்கிச்சூடுகள்
January 8, 2026, 12:49 pm
பயணியா? விமானப் பணிப்பெண்ணா?: விமானத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இளம்பெண்
January 8, 2026, 11:55 am
ஈரானில் பொருளாதார நெருக்கடி : 111 நகரங்களில் அரசு எதிர்ப்பு போராட்டம்
January 5, 2026, 3:35 pm
அணு ஆயுதம் தயார்நிலை: வடகொரியாவின் புதிய நகர்வு
January 4, 2026, 5:50 pm
