செய்திகள் உலகம்
மலேசிய எல்லை அருகே தாய்லாந்தில் 11 பெட்ரோல் நிலையங்களில் தாக்குதல்
பேங்காக்:
தாய்லாந்தின் தென் பகுதியிலிருக்கும் 11 பெட்ரோல் நிலையங்களில் குண்டுவெடிப்புத் தாக்குதல் நடந்துள்ளது.
நராட்டிவாட் (Narathiwat), பட்டானி (Pattani), யாலா (Yala) ஆகிய மாநிலங்களில் இன்று விடிகாலையில் தாக்குதல் நடந்ததாகத் தாய்லாந்து இராணுவப் பேச்சாளர் கூறினார்.
நள்ளிரவுக்குப் பிறகு 40 நிமிடங்களில் அனைத்துக் குண்டுகளும் வெடித்தன.
அந்த தாக்குதலில் நால்வர் காயமடைந்தனர்.
தாய்லாந்தின் தென் பகுதி மலேசியாவுக்கு மிகவும் அருகில் இருக்கிறது. அங்கு வசிக்கும் பெரும்பாலானோர் முஸ்லிம்கள்.
2004ஆம் ஆண்டிலிருந்து அங்கு தன்னாட்சியை விரும்பும் கிளர்ச்சிப் பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன.
யார் தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்ற தகவலை அதிகாரிகள் வெளியிடவில்லை.
ஒரே நேரத்தில் தாக்குதல்கள் நடந்ததாக நராட்டிவாட் மாநில ஆளுநர் செய்தியாளர்களிடம் கூறினார்.
அங்கு காவல்துறை அதிகாரி ஒருவர் காயமடைந்ததை அவர் உறுதி செய்தார்.
பட்டானி மாநிலத்தில் தீயணைப்பாளரும் பெட்ரோல் நிலைய ஊழியர்கள் இருவரும் காயமடைந்தனர்.
தாக்குதல்கள் வரவிருக்கும் தேர்தலைப் பாதிக்கவே நடத்தப்பட்டதாகப் பாதுகாப்பு அதிகாரிகள் கருதுகின்றனர்.
எல்லையில் இருக்கும் மலேசிய இராணுவத்தினர் விழிப்புநிலையில் இருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆதாரம்: AFP
தொடர்புடைய செய்திகள்
February 17, 2026, 5:34 pm
அளவுக்கு மீறிய பயணிகள் ஏற்றம்: பேருந்து அனுமதி இரண்டு மாதங்களுக்கு இடைநிறுத்தம்
February 16, 2026, 6:41 pm
பாகிஸ்தானிலிருந்து விலகிய ஆப்கானிஸ்தான்: மருந்துத் துறைக்கு புதிய அறைகூவல்
February 15, 2026, 11:47 am
தென்கிழக்கு பிரான்சில் பனிச்சரிவில் சிக்கி மூன்று சறுக்கு வீரர்கள் உயிரிழந்தனர்
February 14, 2026, 7:05 pm
பிரான்சில் குழந்தையின் சடலங்களை குளிர்சாதனப் பெட்டியில் மறைத்து வைத்த தாய் கைது
February 14, 2026, 4:41 pm
2 சிசுக்களைக் குளிர் சாதனப் பெட்டியில் வைத்து கொன்ற தாய்
February 14, 2026, 12:42 pm
ஷாங்காயில் மாபெரும் சாலை பிளப்பு: பீதியில் மக்கள்
February 14, 2026, 12:38 pm
பாரிஸில் பதற்றம்: கத்தி ஏந்திய நபர் போலிசார் சுட்டுக் கொலை
February 14, 2026, 10:23 am
