
செய்திகள் இந்தியா
தடுப்பூசி செலுத்தியோரை உணவகங்களில் அனுமதியுங்கள்: குஜராத் உணவகங்கள் சங்கம் வேண்டுகோள்
அஹமதாபாத்:
குஜராத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களை உணவகங்களில் அனுமதிக்க வேண்டாம் என்று தொழிற்சங்கத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இதுதொடர்பாக ஹோட்டல் மற்றும் ரெஸ்டாரெண்ட் சங்கத் தலைவர் நரேந்திர சோமானி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், கொரோனா தடுப்பூசியின் முதல் தவணையாவது செலுத்திய வாடிக்கையாளர்களை மட்டும் அனுமதிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
திருமணம் மற்றும் பண்டிகை காலங்கள் நெருங்குவதால், கொரோனா பரவலை தடுக்க உணவகங்களின் உரிமையாளர்கள் இந்த நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மூன்றாவது அலை தீவிரமடைந்தால், மீண்டும் பொதுமுடக்கம் அமலாகி தொழில் பாதிக்கும் என்பதால், இந்த முயற்சிகளை முன்னெச்சரிக்கையாக பின்பற்றுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
July 8, 2025, 10:13 pm
கேரளம் பத்மநாபசுவாமி கோயிலுக்குள் கேமரா கண்ணாடியுடன் நுழைந்த நபர்
July 8, 2025, 9:39 pm
முதல் முறையாக டிஜிட்டல் முறையில் இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு
July 8, 2025, 8:12 pm
இந்திய பங்குச் சந்தை முறைகேடு; மோடி மவுனம்: ராகுல் குற்றச்சாட்டு
July 8, 2025, 12:40 pm
கடலூரில் பள்ளி வேன் மீது இரயில் மோதி விபத்து: மூன்று மாணவர்கள் பலி
July 7, 2025, 9:41 pm
மும்பையில் ஹிந்தி பேசியவர்கள் மீது தாக்கரே கட்சியினர் தாக்குதல்
July 7, 2025, 9:36 pm
அரசு பங்களாவை காலி செய்யாத உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு நீதிமன்றமே எதிர்ப்பு
July 7, 2025, 8:52 pm
ராயட்டர்ஸ் எக்ஸ் கணக்கு இந்தியாவில் முடக்கம்
July 6, 2025, 6:31 am
இந்தியாவுடனான சண்டையில் பாகிஸ்தானுக்கு சீனா நிகழ்நேர வழிகாட்டியது
July 5, 2025, 11:11 am