செய்திகள் உலகம்
விமான இயந்திரத்துக்குள் இழுக்கப்பட்ட ஊழியர் மரணம்
டெஹ்ரான்:
ஈரானின் விமான நிலையத்தில் விமான இயந்திரத்துக்குள் இழுக்கப்பட்ட ஊழியர் மாண்டார்.
ஷாபார் கோனராக் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாரேஷ் ஏர்லைன்ஸ் விமானத்தை அவர் பழுது பார்த்துக் கொண்டிருந்தார்.
ஜேக்டேக் எனும் விமானப் பாதுகாப்பு நிறுவனம் அந்தச் சம்பவம் குறித்த தகவலை வெளியிட்டது.
அந்த ஊழியர் போயிங் 737-500 ரக விமானத்தின் பாதுகாப்புப் பகுதியில் ஒரு கருவியை விட்டுச் சென்றதை உணர்ந்தார்.
அதை எடுப்பதற்காகத் திரும்பச் சென்றபோது இயங்கிக் கொண்டிருந்த இயந்திரத்தால் அவர் உள்ளே இழுக்கப்பட்டார்.
அந்தப் பாதுகாப்புப் பகுதிக்குள் யாரும் உள்ளே செல்வதைத் தடுக்கத் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன.
உள்ளே சென்ற ஊழியர் இழுக்கப்பட்டதும், இயந்திரம் தீப்பற்றிக் கொண்டது. இதனால் ஊழியரின் உடல் பின்னர் மீட்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பில் ஈரான் விமானப் போக்குவரத்து ஆணையம் சம்பவம் குறித்து விசாரித்து வருகிறது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 25, 2025, 3:45 pm
தாய்லந்தின் முன்னாள் அரசியார் காலமானார்
October 25, 2025, 3:15 pm
காசாவிற்கு அனைத்துலக இராணுவப் படைகளை உடனடியாக அனுப்புமாறு அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் வலியுறுத்து
October 24, 2025, 9:45 pm
மேற்கு கரையை இணைக்க இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மசோதா
October 24, 2025, 4:27 pm
கனடாவுடன் எல்லா வர்த்தகப் பேச்சும் உடனடியாக நிறுத்தப்படும்: டிரம்ப்
October 23, 2025, 9:46 pm
$3 பில்லியன் கள்ளப் பண விவகாரம்: முன்னாள் சிங்கப்பூர் Citibank ஊழியருக்குச் சிறை
October 23, 2025, 2:10 pm
தாய்லாந்தில் ஆலய நன்கொடையை திருடி எடுத்துக்கொண்டு ஓடிய இஸ்ரேலிய ஆடவர் கைது
October 23, 2025, 1:30 pm
நைஜீரியாவில் கச்சா எண்ணெய் டேங்கர் வெடித்ததில் 39 பேர் உயிரிழந்தனர்
October 23, 2025, 9:11 am
இலங்கையில் கடும் மழை பெய்யும்: வானிலை மையம் எச்சரிக்கை
October 23, 2025, 8:23 am
சிங்கப்பூரில் அதிகரிக்கும் சளிக்காய்ச்சல் சம்பவங்கள்
October 22, 2025, 7:48 am
