
செய்திகள் உலகம்
சிங்கப்பூர் வங்கிகளில் இனி OTP அறிவிப்பு முறை நிறுத்தப்படும்
சிங்கப்பூர்:
சிங்கப்பூரில் உள்ள பெரிய வங்கிகள் மின்னஞ்சல் மோசடிக்கு எதிரான மீள்திறனை வலுப்படுத்தவிருக்கின்றன.
OTP எனப்படும் ஒரு முறைக் கடவுச்சொல்லைப் பயன்படுத்தும் முறை இனி கட்டங்கட்டமாக அகற்றப்படும்.
அடுத்த மூன்று மாதத்திற்குள் அது செயல்படுத்தப்படும்.
சிங்கப்பூர் நாணய வாரியமும் சிங்கப்பூர் வங்கிகள் சங்கமும் அதனை அறிவித்தன.
DBS, OCBC, UOB முதலிய வங்கிகள் மாற்றத்தைச் செயல்படுத்தவிருக்கின்றன.
ஊடுருவல்காரர்கள் OTPஐக் களவாட முடியும் அல்லது பயனீட்டாளர்களிடம் மோசடி செய்து அதைப் பெற்றுவிடவும் முடியும்.
Digital token எனும் மின்னிலக்க அடையாள வில்லையைப் பயன்படுத்துவது கூடுதல் பாதுகாப்பாக அமையும் என்று நாணய வாரியமும் வங்கிகள் சங்கமும் தெரிவித்தன.
சிங்கப்பூரில் மின்னஞ்சல் மோசடி தொடர்ந்து கவலைக்குரிய ஒன்றாகவே இருந்துவருகிறது.
காவல்துறைப் புள்ளிவிவரங்களின்படி, சென்ற ஆண்டு அத்தகைய மோசடிகளின் மூலம் சுமார் 14 மில்லியன் வெள்ளியைப் பயனீட்டாளர்கள் இழந்தனர்.
ஆதாரம் : CNA
தொடர்புடைய செய்திகள்
April 18, 2025, 5:50 pm
கத்திமுனையில் விமானத்தை கடத்திய நபர்; நடுவானில் சுட்டுக்கொலை
April 18, 2025, 5:40 pm
ஒரு வாழைப் பழம் 25 ரிங்கிட்: விமான நிலையங்களுக்கெல்லாம் ’காட் ஃபாதர்’
April 18, 2025, 1:19 pm
தவறான கணினி மென்பொருள் மூலம் மோசடிச் சம்பவங்கள்: $2.4 மில்லியன் இழந்த சிங்கப்பூரர்கள்
April 17, 2025, 8:23 pm
கொலம்பியாவில் மஞ்சள் காய்ச்சல் அதிகரிப்பு: அரசு அவசரநிலை பிரகடனம்
April 17, 2025, 2:50 pm
சவாலான சூழலை நம்பிக்கையோடு எதிர்க்கொள்வோம்: சிங்கப்பூர் பிரதமர் வோங்
April 17, 2025, 2:22 pm
சீனா அதிபர் ஷி ஜின்பிங் அரசு முறை பயணமாக கம்போடியா நாட்டைச் சென்றடைந்தார்
April 17, 2025, 10:34 am
அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வரிக்கு எதிராக கலிப்போர்னியா மாநிலம் வழக்குத் தொடுத்துள்ளது
April 16, 2025, 2:46 pm
இஸ்ரேல் நாட்டவர்கள் மாலத்தீவுக்குள் நுழைய தடை : மாலத்தீவு அரசாங்கம் அறிவிப்பு
April 16, 2025, 11:50 am