
செய்திகள் உலகம்
சிங்கப்பூர் வங்கிகளில் இனி OTP அறிவிப்பு முறை நிறுத்தப்படும்
சிங்கப்பூர்:
சிங்கப்பூரில் உள்ள பெரிய வங்கிகள் மின்னஞ்சல் மோசடிக்கு எதிரான மீள்திறனை வலுப்படுத்தவிருக்கின்றன.
OTP எனப்படும் ஒரு முறைக் கடவுச்சொல்லைப் பயன்படுத்தும் முறை இனி கட்டங்கட்டமாக அகற்றப்படும்.
அடுத்த மூன்று மாதத்திற்குள் அது செயல்படுத்தப்படும்.
சிங்கப்பூர் நாணய வாரியமும் சிங்கப்பூர் வங்கிகள் சங்கமும் அதனை அறிவித்தன.
DBS, OCBC, UOB முதலிய வங்கிகள் மாற்றத்தைச் செயல்படுத்தவிருக்கின்றன.
ஊடுருவல்காரர்கள் OTPஐக் களவாட முடியும் அல்லது பயனீட்டாளர்களிடம் மோசடி செய்து அதைப் பெற்றுவிடவும் முடியும்.
Digital token எனும் மின்னிலக்க அடையாள வில்லையைப் பயன்படுத்துவது கூடுதல் பாதுகாப்பாக அமையும் என்று நாணய வாரியமும் வங்கிகள் சங்கமும் தெரிவித்தன.
சிங்கப்பூரில் மின்னஞ்சல் மோசடி தொடர்ந்து கவலைக்குரிய ஒன்றாகவே இருந்துவருகிறது.
காவல்துறைப் புள்ளிவிவரங்களின்படி, சென்ற ஆண்டு அத்தகைய மோசடிகளின் மூலம் சுமார் 14 மில்லியன் வெள்ளியைப் பயனீட்டாளர்கள் இழந்தனர்.
ஆதாரம் : CNA
தொடர்புடைய செய்திகள்
May 9, 2025, 2:00 pm
சிங்கப்பூர் முழுவதும் காவல்துறை அதிரடி சோதனை: 313 பேர் விசாரிக்கப்பட்டனர்
May 9, 2025, 10:00 am
கத்தோலிக்க சமூகத்தினரின் புதிய போப் தேர்ந்தெடுக்கப்பட்டார்
May 8, 2025, 11:09 am
புதிய போப்பிற்கான முதல் வாக்களிப்பில் பெரும்பான்மை எட்டப்படவில்லை
May 8, 2025, 10:28 am
உலகளாவிய வணிகப் பிரிவில் கூகுள் 200 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது
May 7, 2025, 5:33 pm
ஸ்காட்லாந்தில் உலகின் பழமையான கால்பந்து மைதானம் கண்டுபிடிப்பு
May 7, 2025, 3:50 pm
இந்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததுடன் 46 பேர் காயமடைந்தனர்: பாகிஸ்தான் அறிவிப்பு
May 6, 2025, 4:03 pm