
செய்திகள் உலகம்
இந்திய ராணுவ தாக்குதலில் 26 பேர் பலி; இது போர் நடவடிக்கை ஆகும்: பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் இஷாக் தார்
இஸ்லாமாபாத்:
‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலை கடுமையாக விமர்சித்துள்ள பாகிஸ்தான், ‘இந்தியாவின் தாக்குதல் என்பது அப்பட்டமான போர் நடவடிக்கை. இந்தியாவின் இந்தத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். 46 பேர் காயமடைந்தனர். இந்தப் போர் நடவடிக்கைக்கு பதிலடி தரும் உரிமை எங்களுக்கு உண்டு’ என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
‘இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் ஆயுதங்களை நிலைநிறுத்தி, சர்வதேச எல்லைப் பகுதியில் உள்ள மக்களை குறிவைத்துத் தாக்கியது பாகிஸ்தானின் இறையாண்மையை மீறிய செயலாகும்.
ஐக்கிய நாடுகள் சபையின் சாசனம் பிரிவு 51 மற்றும் சர்வதேச சட்டங்களின்படி, தேவையான நேரத்தில் திருப்பித் தாக்கும் உரிமை என்பது பாகிஸ்தானுக்கும் உண்டு.
இந்தத் தாக்குதல்களில் குழந்தைகள் உட்பட பொது மக்கள் கொல்லப்பட்டதற்கு இந்தியாவே காரணம்’ என்று தெரிவித்துள்ளது.
உயிரிழப்பு விவரம்: மேலும், பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக அலுவலகத்துக்கு பாகிஸ்தான் தனியாக சம்மன் அனுப்பி இந்தியாவின் தாக்குதலுக்கு கண்டனத்தை பதிவு செய்துள்ளது.
அத்துடன், இந்தத் தாக்குதல் பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. ‘இந்தியாவின் தாக்குதல் என்பது அப்பட்டமான போர் நடவடிக்கை.
இந்தியாவின் இந்தத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். 46 பேர் காயமடைந்தனர்’ என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 15, 2025, 9:58 pm
இந்தியாவில் 3 தரமற்ற இருமல் மருந்துகள்: WHO எச்சரிக்கை
October 15, 2025, 5:54 pm
உலகளாவிய தலைமைத்துவ விருது விழா: தாய்லாந்து அரச இளவரசியால் தொடங்கி வைக்கப்பட்டது
October 14, 2025, 12:53 pm
சிங்கப்பூர் மரீன் பரேட் இலவச இடைவழிப் பேருந்துச் சேவை முடிவுக்கு வருகிறது
October 13, 2025, 12:25 pm
காசா போர் முடிந்தது: இஸ்ரேலுக்கு புறப்பட்டார் டிரம்ப்
October 12, 2025, 6:54 pm
சீனாவுக்கு கூடுதலாக 100 சதவீத வரி: டிரம்ப் மிரட்டல்
October 12, 2025, 3:27 pm
ஐரோப்பியப் பயணமா?: இனி அங்க அடையாள விவரங்களைப் பதிவுசெய்ய வேண்டும்
October 12, 2025, 10:19 am
பிலிப்பைன்ஸில் மீண்டும் நிலநடுக்கம்
October 11, 2025, 12:25 pm
டிரம்பின் கனவு கலைந்தது: அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலா எதிர்க்கட்சி தலைவர் மரியாவுக்கு கிடைத்தது
October 11, 2025, 12:02 pm