நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இந்தியா- பாகிஸ்தான் மோதலில் அமெரிக்கா தலையிடாது:  அமெரிக்கா துணை அதிபர் JD VANCE அறிவிப்பு 

வாஷிங்டன்: 

இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே கடுமையான போர் நடந்து வரும் சூழலில் அமெரிக்கா இந்த போரில் தலையிடாது என்று அமெரிக்காவின் துணை அதிபர் JD VANCE அறிவித்தார். 

மேலும், இந்தியா- பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் போரைத் தணிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. 

அரச தந்திர பேச்சுவார்த்தையின்  வாயிலாக இரு நாடுகளும் அமைதி பேச்சு வார்த்தைக்கு வர வேண்டும். 

இந்தியா ஆயுதத்தை கைவிடவேண்டுமென அமெரிக்காவால் கூற முடியாது. ஆயுதத்தை கைவிடுங்கள் என்று பாகிஸ்தானிடமும் கூற முடியாது என்று அவர் சொன்னார். 

இந்தியா- பாகிஸ்தான் மோதலை அடுத்து நிலைமையை கவனித்து வருவதாக அமெரிக்க வெளியுறவு துறை தெரிவித்துள்ளது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset