நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சுங்கை பாக்காப் தோல்வியை எச்சரிக்கை சமிஞ்சையாக நம்பிக்கை கூட்டணி கருத வேண்டும்: நூருல் இசா

நிபோங் திபால்:

சுங்கை பாக்காப் தோல்வியை எச்சரிக்கை சமிஞ்சையாக நம்பிக்கை கூட்டணி கருத வேண்டும்.

கெஅடிலான் கட்சியின் உதவித் தலைவர் நூருல் இசா இதனை கூறினார்.

சுங்கை பாக்காப் சட்டமன்ற இடைத் தேர்தல் முடிவு நம்பிக்கை கூட்டணி, கெஅடிலான் கட்சியின் நிலைப்பாட்டைப் பிரதிபலிக்கிறது.

இந்த தேர்தலில் தோல்வியடைந்தாலும், பினாங்கு, மலேசியாவின் சிறந்த எதிர்காலத்திற்காக கெஅடிலான் தொடர்ந்து மாற்றங்களைச் செய்யும்.

நாம் தொடர்ந்து மிகவும் வசதியாக இருக்க முடியாது.

மக்களை நம்பவைக்கும் வேலையை தொடர முடியாது என்பதையும் தொடர்ந்து பிரதிபலிக்கவும் நினைவூட்டவும் ஒரு சமிக்ஞையாக இந்த தோல்வி அஅமைந்துள்ளது.

ஆகையால் இந்த தோல்வியை முழுப் பொறுப்புடன் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset