செய்திகள் மலேசியா
ஷாஆலம் தாமான் ஶ்ரீ மூடாவில் அதிரடி சோதனை; 602 அந்நிய நாட்டினர் கைது: அமிரூடின் ஷாரி
ஷாஆலம்:
தாமான் ஶ்ரீ மூடாவில் குடிநுழைவு இலாகாவினர் மேற்கொண்ட அதிரடி சோதனையில் 602 அந்நிய நாட்டினர் கைது செய்யப்பட்டனர்.
சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோஶ்ரீ அமிரூடின் ஷாரி இதனை கூறினார்.
செக்சன் 25இல் உள்ள வணிகத் தளத்தில் குடிநுழைவு இலாகாவினர் அதிரடி சோதனைகளை நடத்தினர்.
கிட்டத்தட்ட 1091 அந்நிய நாட்டினரை அதிகாரிகள் தடுத்து உரிய சோதனைகளை நடத்தினர்.
இதில் 602 அந்நிய நாட்டினர் பல்வேறு குற்றங்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்டனர்.
கைதானவர்கள் அனைவரும் 19 முதல் 53 வயதுக்கு உட்பட்டவர்களாவர்.
கைதானவர்கள் அனைவரும் செமினி தடுப்பு மிகாமிற்கு கொண்டு செல்லப்பட்டனர்.
சிலாங்கூர் மாநிலத்தில் சட்டவிரோத அந்நிய நாட்டினரை துடை தொழிக்கும் வகையில் இதுபோன்ற நடவடிக்கைகள் தொடரும் என்று டத்தோஶ்ரீ அமிரூடின் ஷாரி கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 5, 2024, 6:29 pm
தீபாவளி உணவுக் கூடைகளுக்கான ஒடுக்கீட்டை பிரதமர் அதிகரிக்க வேண்டும்: டத்தோ சரவணக்குமார்
October 5, 2024, 6:26 pm
ராணுவ வீரர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் போலிஸ் அதிகாரி கைது: சைபுடின்
October 5, 2024, 6:25 pm